இந்தியாவில் அமைப்பு சார்ந்த பொருளாதார துறைகளில் (Organized Economy) வேலை பார்க்கும் அத்தனை பேரும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பளம் வாங்கினால் அவர்கள், பிஎஃப் செலுத்த வேண்டி இருக்கும். அப்படி இந்தியாவின் சுமாராக 6 கோடி பி எஃப் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களாம்.

இந்த 6 கோடி பி எஃப் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பிஎஃப் தொகைக்கு, அரசு அமைப்பான Employees' Provident Fund Organisation (EPFO) ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாகச் கொடுப்பார்கள். அந்த வட்டியை, நம் பிஎஃப் கணக்கிலேயே வரவும் வைத்துவிடுவார்கள்.
கடந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு, பிஎஃப் பணத்துக்கு 8.5 சதவிகிதம் வட்டி கொடுப்பதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் தற்போது, அந்த வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கொரோனா வைரஸ் பிரச்சனையால், அரசுக்கு பண வரவு மிகவும் குறைந்து இருக்கிறதாம். எனவே முன்பே அறிவித்த வட்டி விகிதங்களை கொடுப்பது பி எஃப் அமைப்புக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த பி எஃப் அமைப்பு, சொன்ன படி, வட்டி விகிதத்தைக் கொடுக்க முடியுமா என, பி எஃப் அமைப்பின் நிதி முதலீடு மற்றும் ஆடிட் கமிட்டி (finance, investment and audit committee - FIAC) மதிப்பீடு செயய் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, பி எஃப் அமைப்பு அறிவித்த 8.5 சதவிகிதம் வட்டித் தொகையை, இதுவரை மத்திய நிதி அமைச்சகம் அனுமதிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் நிதி அமைச்சகம், பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்களை அப்ரூவ் செய்த பின்னர் தான், மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், அதை அதிகார பூர்வமாக அறிவிக்க முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த கொரோனா வைரஸ் காலத்தில், பி எஃப் வாடிக்கையாளர்களுக்கு, பி எஃப் பணத்தைக் கொடுப்பது போன்ற பல நல்ல திட்டங்களை அரசு கொண்டு வந்திருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
இன்னும் இந்த கொரோனா வைரஸால், உலகம் என்ன மாதிரியான மாற்றங்களை எல்லாம் பார்க்கப் போகிறதோ தெரியவில்லை. அரசு மக்களின் எதிர்காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவு செய்தால் சரி.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications