தங்கத்தில் முதலீடு செய்ய நினைக்காதீங்க.. கொஞ்சம் காசு கிடைத்தால் இதுதாங்க பெஸ்ட்..

பொதுவாக முதலீட்டாளர்கள், பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய 4 சொத்துக்களில் முதலீடு செய்வது வாடிக்கை. தற்போது பங்குச் சந்தை பலத்த அடி வாங்கி வருகின்றன. இதனால் இப்போது பங்குகளில் முதலீடு செய்வது சரியானதாக இருக்காது.

அதேசமயம் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஏறிய வேகத்தில் தங்கத்தின் விலை இறங்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதேசமயம் கடன் பத்திரங்கள் நிலையான வருமானத்தை தருகின்றன. ஆனால் வருமானம் குறைவாக இருப்பது பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்ய நினைக்காதீங்க.. கொஞ்சம் காசு கிடைத்தால் இதுதாங்க பெஸ்ட்..

இதனால் தற்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம் என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதற்கு தீர்வு வழங்கியுள்ளார் ஆனந்த் ரதி வெல்த் லிமிடெட் நிறுவனத்தின் மும்பை பிரிவு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான அமிதாப் லாரா.

அமிதாப் லாரா கூறியதாவது: ஈக்விட்டி, கடன், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய நான்கும் முதலீட்டுக்கான சிறந்த சொத்துக்களாக உள்ளன. இதை இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும். பங்கு மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய வளர்ச்சி சார்ந்த சொத்துக்களை ஒரு பிரிவாகவும், டெபிட் பண்ட் மற்றும் குறுகிய கால முதலீடுகள் ஆகியவற்றை மற்றொரு பிரிவாகவும் பிரிக்க வேண்டும்.

டெபிட் பண்டுகளில் மட்டுமே முதலீடு செய்தால் மிகக் குறைவான வருமானம்தான் கிடைக்கும். ஏனெனில் டெபிட் பண்டு திட்டங்கள் 6 முதல் 7 சதவீதம் மட்டுமே வருமானத்தை கொடுக்கும். முதலீட்டாளர்கள் இந்த சொத்து பிரிவை வளர்ச்சி சொத்துக்களுடன் இணைப்பது குறித்து யோசிக்கலாம். ஏனெனில் இது போர்ட்போலியாவில் நிலைத்தன்மை வழங்கும் என்று தெரிவித்தார்.

2024 செப்டம்பர் 26 முதல் சென்செக்ஸ் 11 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேசமயம் இதே காலத்தில் தங்கம் 13.2 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் கடன் திட்டங்கள் நிலையாக 2.5 சதவீத நிலையான வருமானத்தை வழங்கியுள்ளன.

தங்கத்தை பொறுத்தவரை சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் நிலையற்ற சொத்தாக மாற்றப்பட்டுள்ளது மேலும் நிலையான வருமானத்தை மிகவும் நிலையற்றதாகி விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் ரோலிங் ரிட்டனை பார்த்தால், 0.5 செயல்திறன் விகிதத்துடன் 12 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது.

அதே காலகட்டத்தில் ஈக்விட்டி 0.9 செயல்திறன் விகிதத்துடன் 21 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, போர்ட்போலியாவில் தங்கத்தை ஆராய (கூடுதல் முதலீடு செய்ய) நாங்கள் பரிந்துரைக்கவில்லை. போர்ட்போலியாவில் உள்ள பழமைவாத சொத்துப் பகுதியில், கடனை மட்டுமே சாத்தியமான சொத்தாக பரிந்துரைக்கிறோம்.

ஒரு முதலீட்டாளர் குறுகிய கால இலக்குகளுக்கு (5 ஆண்டுகள்) முதலீடு செய்தால், 80:20 என்ற விகிதத்தில் சொத்து கலவை இருக்க பரிந்துரைக்கிறோம். கூடுதலாக, குறைந்த கூட்டு சொத்துக்களில் முதலீடு செய்வது நிச்சயமற்ற காலங்களில் போர்ட்போலியாவின் நிலையற்ற தன்மையை குறைக்க உதவும்.

பங்கு மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது பல்வேறு பங்குகளில் பல்வகைப்படுத்துதலை வழங்குகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய வேண்டிய அவசியத்தை குறைக்கிறது.

சந்தையின் ஏற்ற இறக்கம் நேரடியாக வருமானத்தை குறைக்கும் அதேவேளையில், பங்குச் சந்தையில் நல்ல ஆதாயத்தை பெற விரும்பும் தனிநபர்களுக்கு இதே ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக இருக்கும். கடன்பண்டுகள் முதன்மையான அரசாங்க பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் கருவூல பில்கள் போன்ற நிலையான வருமான கருவிகளில் முதலீடு செய்கின்றன.

இந்த பண்டுகளை பங்கு பண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த ரிஸ்க் அளவுகளை கொண்டுள்ளன. இதனால் பழமைவாத முதலீட்டாளர்களுக்கு கடன் பண்டுகள் விருப்பமான தேர்வாக அமைகின்றன என்று தெரிவித்தார்.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+