ஒரு சராசரி ஐடி ஊழியர்.. வருடம் 3 லட்சம் சம்பளத்தை வாங்கிகொண்டு 9 கோடி சொத்து சேர்த்த வியக்கவைக்கும் கதை..!

ஐடி ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தால் தங்களுடைய வேலை பாதுகாப்பாக இருக்குமா..? என்ற அச்சத்துடன் இருக்கும் வேளையில் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு பதிவு பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

நீண்டகால மற்றும் ஒழுக்கமான முதலீடு எவ்வாறு பெரிய செல்வத்தை உருவாக்க முடியும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது இந்த பதிவு. 47 வயதான ஒரு ஐடி ஊழியர் ரெடிட் தளத்தில் தனது நிதியியல் பயணத்தை பகிர்ந்துள்ளார்.

ஒரு சராசரி ஐடி ஊழியர்! வருடம் 3லட்சம் சம்பளத்தை வாங்கிகொண்டு 9கோடி சொத்து சேர்த்த வியக்கவைக்கும் கதை

அவர் தன்னை "சாதாரண ஐடி ஊழியர்" என்று குறிப்பிடுகிறார். தனது வாழ்க்கையில் பெரிய சம்பளம் கொண்ட வேலை, பரம்பரை செல்வம் அல்லது அதிர்ஷ்டம் எதுவும் இல்லாதவர் என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுப்படுத்தியுள்ளார்.

2005-ஆம் ஆண்டு தனது பணியை ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பளத்தில் தொடங்கிய இவர், அப்போது எந்த முதலீடும் செய்திருக்கவில்லை. படிப்படியாக சம்பளம் உயர்ந்தபோது, தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கத்தை உருவாக்கினார்.

இந்த முதலீட்டு பழக்கம் 2010-ஆம் ஆண்டில் அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக உயர்ந்தபோது, அவரது முதலீட்டு போர்ட்ஃபோலியோ மதிப்பு ரூ.10 லட்சத்தை எட்டியது. 2016-ஆம் ஆண்டில் சம்பளம் ரூ.25 லட்சமாக உயர்ந்தபோது, முதலீட்டு மதிப்பு ரூ.1 கோடியைத் தாண்டியது. இது கூட்டு வட்டி (compounding) பலனின் ஆரம்ப அறிகுறியாக அமைந்தது.

தொடர் முதலீடும், ஆரம்ப கால முதலீட்டின் பலனும் இங்குதான் தெளிவாகத் தெரிந்தது. 2020-ஆம் ஆண்டில் சம்பளம் ரூ.35 லட்சமாக இருந்தபோது, போர்ட்ஃபோலியோ மதிப்பு ரூ.2 கோடியை நெருங்கியது. தற்போது ஆண்டுக்கு ரூ.65 லட்சம் சம்பளம் பெறும் இவர், 20 ஆண்டுகளில் ரூ.9 கோடி சொத்து உருவாக்கியுள்ளார்.

என்ன முதலீடு செய்தார்?
அவரது சொத்துகளில் ரூ.8 கோடி அளவுக்கு இந்திய பங்குச் சந்தை (equities) முதலீடுகள் உள்ளன. ரூ.1 கோடி மியூச்சுவல் ஃபண்டுகளிலும், சொந்த வீட்டிலும் உள்ளது. ESOPகள், வெளிநாட்டு வருமானம், பெரிய ரியல் எஸ்டேட் முதலீடு அல்லது பரம்பரை செல்வம் எதுவும் இல்லாமல் இந்த சொத்து உருவானது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

குடும்பத்தில் ஒரே ஆள் சம்பாதித்த காரணத்தால், தான் ஆரம்பம் முதலேயே எளிமையான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தாக குறிப்பிடும் இவர் முதலீட்டை முக்கியமானதாக மாற்றினார். ஃபிக்ஸ்ட் டெபாசிட் போன்ற பாதுகாப்பான வழிகளைத் தவிர்த்து, நீண்டகால பங்கு முதலீட்டில் கவனம் செலுத்தினார்.

கூட்டு வட்டியின் உண்மையான சக்தி
அவர் குறிப்பிடுவது போல, கூட்டு வட்டியின் (compounding) உண்மையான ஆற்றல் 10-15 ஆண்டுகளுக்குப் பிறகே தெரியும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த பல பங்குகளை இன்றும் விற்காமல் வைத்திருக்கிறார்.

இந்த கதை சாமானிய மக்களுக்கு ஒரு முக்கிய பாடம், பெரிய சம்பளம் அல்லது அதிர்ஷ்டம் இல்லாமலும், ஒழுக்கம், தொடர்ச்சி மற்றும் நீண்டகால பொறுமை மூலம் செல்வத்தை உருவாக்க முடியும். இன்றைய வேகமான உலகில், இந்த எளிமையான அணுகுமுறை பலருக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+