வருமான வரி செலுத்துவோருக்கு இது ஒரு குட் நியூஸ் எனலாம். ஏனெனில் வருமான வரி செலுத்தும் நபர்கள், இனி வருமான வரித் தாக்கல் செய்ய அலைய வேண்டியதில்லை.
இனி அருகில் உள்ள தபால் அலுவலக பொதுச் சேவை மையத்திலேயே வருமான வரித் தாக்கல் செய்துவிடலாம்.
இதுகுறித்து இந்திய தபால் துறை ட்விட்டரில், வருமான வரித் தாக்கல் செய்ய தொலைதூரம் பயணிக்கத் தேவையில்லை. அருகில் உள்ள தபால் அலுவலத்தில் பொதுச் சேவை மையக் கவுண்ட்டரில் வருமான வரி தாக்கல் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
வருமான வரி வலைதளத்தில் வரி தாக்கல் செய்வோருக்கு, அஞ்சலகத்தில் இந்த நடவடிக்கை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனலாம். ஏனெனில் வருமான வரித் தளத்தில் பல சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் கடைசி நேரத்தில் பலராலும் வருமான வரி தாக்கல் செய்ய முடியாமல் போனது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் இந்த common services centres, நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளையும் வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
அண்மையில் வருமான வரித் துறையின் புதிய இணையதளம் (www.incometax.gov.in) அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரி செலுத்துவோர் எளிமையாக சேவைகளை பெறும் வகையில் புதிய இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அஞ்சலத்திலும் தாக்கல் செய்யலாம் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.