342 ரூபாய் மூலம் ரூ.4 லட்சம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் சான்ஸ்.. எப்படி!

நாட்டில் கொரோனாவின் வருகைக்குப் பிறகு இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது எனலாம்.

குறிப்பாக அரசு வழங்கும் இன்ஷூரன்ஸ் திட்டங்களில், குறைந்த பிரீமியத்தில், அதிக காப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்பது மிகவும் கவர்ச்சிகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா உள்ளிட்ட சில திட்டங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இந்த காப்பீட்டு திட்டங்களில் வெறும் 342 ரூபாய் பிரீமியமாக செலுத்தினால், 4 லட்சம் வரையில் காப்பீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

அரசு வழங்கி வரும் பல்வேறு திட்டங்களில் ஒன்று பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா. இந்த திட்டத்தில் வெறும் 330 ரூபாய் பிரிமீயம் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் எடுக்க முடியும். அதோடு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தான் இந்த சேமிப்பு கணக்கினை எடுக்க முடியும்.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா - இறப்பு பலன்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா - இறப்பு பலன்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் வருடத்திற்கு 330 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். ஓரு வேளை பாலிசிதாரர் இறந்து விட்டால், இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபாய் வரை க்ளைம் செய்து கொள்ள முடியும்.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம்

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம்

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா எனப்படும் காப்பீடு திட்டமானது, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்துடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு குறுகிய கால காப்பீட்டு திட்டமாகும். இது விபத்து காரணமாக இறப்போ அல்லது உடல் ஊனமோ ஏற்பட்டால் வழங்கப்படும் ஒரு காப்பீடாகும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் படி, தனி நபர் இறப்பிற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், இதே நிரந்தர ஊனத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், இதுவே உடல் ஊனத்திற்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகின்றது.

சுரக்ஷா பீமா யோஜனாவில் எவ்வளவு பிரீமியம்?

சுரக்ஷா பீமா யோஜனாவில் எவ்வளவு பிரீமியம்?

இந்த திட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் இன்சூரன்ஸ் பிரீமியம் தான். ஏனெனில் வருடத்திற்கு வெறும் 12 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதுமானது. அதாவது மாதத்திற்கு நீங்கள் வெறும் 1 ரூபாய் செலவு செய்தாலே போதுமானது. ஆனால் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும் எனில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதோடு இந்தத் இன்சூரன்ஸ் திட்டத்தில் பங்கேற்க 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் இதற்கு தகுதியானவர் எனில், வங்கிகளை அணுகி அதற்கான விண்ணப்பத்தினை கொடுக்கலாம்.

எப்போது பிரீமியம் செலுத்தனும்?

எப்போது பிரீமியம் செலுத்தனும்?

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பங்கேற்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 12 ரூபாய் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். இந்த தொகையானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதிக்குள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். முதல் ஆண்டில் பிரீமியம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம், அடுத்த வருடத்தில் முதல் பருவத்திலிருந்து தொடங்கும்.

பிரீமியம் - ஆட்டோமேட்டிக் டெபிட்

பிரீமியம் - ஆட்டோமேட்டிக் டெபிட்

இந்த திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பெற வங்கியில் விண்ணப்பங்கள் சமர்பிக்கும் போதே, இன்சூரன்ஸ் திட்டத்திற்கான பிரீமியத்தை வங்கியே தானாக எடுத்துக்கொள்ளும் ஆட்டோமேட்டிக் டெபிட் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது 12 ரூபாய் ஆனது மே 31ம் தேதிக்கு முன்னர், உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே இன்சூரன்ஸ் திட்டத்திற்கு செலுத்தப்படும்.

தொகை இல்லையெனில் பாலிசி முடிவடைந்து விடும்

தொகை இல்லையெனில் பாலிசி முடிவடைந்து விடும்

ஒரு வேளை உங்களுடைய வங்கிக் கணக்கு ஜாய்ண்ட் கணக்கு எனில் (Joint Account) கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்காகவும் 12 ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான நிலுவைத் தொகையை வைத்திருக்கவில்லை எனில், உங்கள் திட்டம் ரத்து செய்யப்படும். இது தவிர வங்கி கணக்கு மூடப்பட்டால் பாலிசி முடிவடையும். பிரிமீயம் டெபாசிட் செய்யப்படாவிட்டால் பாலிசியை புதுபிக்க முடியாது.

எந்தெந்த வங்கிகள் இணையலாம்?

எந்தெந்த வங்கிகள் இணையலாம்?

இந்த இன்சூரன்ஸ் திட்டத்தினை எஸ்பிஐ, வங்கிகள், ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, ஃபெடரல் வங்கி, ஹெச் டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் இந்தியா, உள்ளிட்ட பல வங்கிகளில் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்காக

கூடுதல் விவரங்களுக்காக

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)-க்கான படிவம் வெவ்வேறு இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. இவற்றில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, பங்களா, கன்னடம், ஒடியா, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவை அடங்கும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://jansuraksha.gov.in/Forms-PMSBY.aspx என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+