அடடே இது செம நியூஸ் ஆச்சே.. சுகாதார ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் நீட்டிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும், சுகாதார துறையை சார்ந்த ஊழியர்கள் பலரும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

 

இதன் காரணமாக அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, சுகாதார துறை ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தினை செப்டம்பர் 3 வரை, மேலும் கூடுதலாக மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

 
அடடே இது செம நியூஸ் ஆச்சே.. சுகாதார ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் நீட்டிப்பு..!

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் அமல்படுத்திய இந்த சிறப்பு இன்சூரன்ஸ் திட்டமானது ஜூன் 30 அன்று முடிவடைய உள்ள நிலையில், அரசு இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்கள், மற்றும் சுகாரதாரப் பணியாளர்களுக்கு 50 லட்சம் மதிப்பிலான காப்பீடு திட்டம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த ஆண்டு மார்ச் 30 வரை நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டம், அரசு நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு மையங்களில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான, இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செப்டம்பர் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காப்பீட்டு திட்டம் மூலம் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் பணி புரியும் மொத்தம் 22 லட்சம் மருத்துவ நிபுணர்களுக்கு இந்த காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தனிப்பட்ட விபத்து பாதுகாப்புக்கு 50 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். மேலும் இவர்கள் கொரோனா நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் உள்ளமையால், அவர்கள் எளிதில் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இத்தகைய அறிவிப்பினை கொடுத்திருக்கலாம்.

ஆக இந்த காப்பீடானது மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்கள், நர்ஸ்கள், துணை மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மாநில அரசுகளின் கீழ் பணி புரியும் மருத்துவ வல்லுனர்கள் ஆகியோர் இந்த அதிரடியான திட்டத்தின் கீழ் வருவர் எனவும் கூறப்படுகிறது.

இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சினால் இயக்கப்படும் இந்த காப்பீட்டுத் திட்டத்திற்கு, தேசிய பேரிடர் பதிலளிப்பு நிதி மூலம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt extended special insurance scheme for health insurance workers till September

PM narendra modi govt extended theRs.50 lakh insurance scheme for health workers for another 3 month till Sep.
Story first published: Sunday, June 21, 2020, 19:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X