வங்கிகளில் கடன் வாங்குபவர்கள் ஏற்கனவே, கடனுக்கான மாத தவணைகளை செலுத்த சிரமப்படும் நேரத்தில், நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, இரண்டு கால கட்டங்களில் தனது கடன் விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி ஆனது பண்டிகையின் போது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடன்களில் இரண்டு கால கட்டங்களிலும் பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் அக்டோபர் 07, 2024 முதல் அதாவது இன்று முதல் அமலுக்கு வரும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி எடுத்த இந்த முடிவால் எச்டிஎஃப்சி வங்கியில் கடன் பெற்றவர்களின் இஎம்ஐ அதிகரிக்கும். தற்போது எச்டிஎஃப்சி வங்கியின் கடனுக்கான மார்ஜினல் காஸ்ட் ரேட் (MCLR) வட்டி விகிதங்கள் 9.10 சதவீதம் முதல் 9.45 சதவீதம் வரை உள்ளது.
சமீபத்தில், வங்கி 6 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் வாகனம், தனிநபர், வீட்டுக் கடன்கள் மற்றும் பெரும்பாலான நுகர்வோர் கடன்களுக்கு பொருந்தும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி அறிக்கையின்படி, 6 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகள் கொண்ட MCLR மட்டுமே 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது என வங்கி தெரிவித்துள்ளது. MCLR என்பது வங்கிகள் கடன் வழங்க அனுமதிக்கும் குறைந்தபட்ச கடன் விகிதமாகும். இந்த கடன் விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) தீர்மானிக்கப்படுகிறது.
கடன் வாங்குபவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கடன் காலத்தின் அடிப்படையில் MCLR ஐ கணக்கிடுகின்றனர். தற்போது, எச்டிஎஃப்சி வங்கி ஒரே இரவில் 9.10 சதவிகிதமும், 1 மாத காலத்திற்கு 9.15 சதவிகிதமும், 3 மாத காலத்திற்கு 9.30 சதவிகிதமும், 6 மாதங்கள், 1 வருடம், 2 வருட காலத்திற்கு 9.45 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இறுதியாக 3 வருட காலத்திற்கு 9.50 சதவிகிதம் வழங்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications