அவசர தேவைக்கு கடன் வேண்டும் எனில் நாம் அடுத்து செய்வது என்ன? ஏதேனும் வங்கி இணையத்திலோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் இணையதளங்களிலோ அப்ளை செய்வோம். அப்படி இல்லை என்றாலும் ஆப் மூலமாக விண்ணப்பிப்போம்.
உங்களது முகவரி சான்று, அடையாள சான்று, வாருமான ஆதரமாக வங்கி ஸ்டேட்மெண்ட், பே ஸ்லீப் என கேட்பார்கள். நாமும் அப்லோட் செய்து வாங்குவோம்.
ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது நான் எந்த வேலையிலும் இல்லை. என்னிடம் பே ஸ்லீப் இல்லை. வேலையில்லை. பிறகு நான் எப்படி அவசர தேவைக்கு கடன் வாங்குவது? என்னென்ன வழிகளில் எல்லாம் வாங்கலாம் என பார்க்க விருக்கிறோம்.
வேலையிழந்து தவிப்பு
அதிலும் தற்போது கொரோனாவின் காரணமாக மக்கள் தங்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் மோசமான நிதி நெருக்கடியையும் சந்தித்து வருகின்றனர். சிலர் இந்த அவசர தேவைக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். ஏனெனில் வேலையில்லை. பே ஸ்லீப் இல்லை எப்படி கடனுக்கு அப்ளை செய்வது? அடுத்து என்ன செய்வது என தவிப்பவர்கள் ஏராளம். பொதுவாக நீங்கள் கடன் வாங்கும்போது முக்கிய ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படுவது, உங்களுடைய வருமானம் எவ்வளவு என்பதை தான்.
என்ன கடன் பெறலாம்?
ஆக அப்படி இருக்கும்பட்சத்தில் நீங்கள் கடன் பெறுவதும் மிக கஷ்டமான விஷயமே. குறிப்பாக பர்சனல் லோன் என்பது கிடைக்காது. ஆனால் இந்த நெருக்கடியான நேரத்திலும் நீங்கள் கடன் பெற சில வழிகள் உண்டு. சற்று யோசித்து பார்த்தால் உங்களுக்கு அது உதவும். குறிப்பாக வேலையில்லா சமயத்திலும் பலருக்கு உதவுவது, நகைக் கடன் என்றாலும், அதுவும் இல்லாத பட்சத்தில் சில வழிகள் உள்ளன.
பிணையக் கடன்
உங்களுக்கு வேலையில்லாத சமயத்தில் பிணையமாக எதையேனும் வைத்து கடன் பெறலாம். குறிப்பாக நகைக்கடன், இடத்தின் மேல் கடன் வாங்கலாம். அல்லது வேறு ஏதேனும் சொத்துக்கள் இருந்தாலும் அதனை பிணையமாக வைத்தும் கடன் வாங்கலாம். இதற்கு வட்டி விகிதமும் குறைவு. இதற்கு நீங்கள் வருமான ஆதாரம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.
துணையின் வருமானத்தினை வைத்துக் கடன்
நீங்கள் திருமணம் ஆனவர் என்றால், உங்களது துணைவியின் வருமானத்தை வைத்துக் கடன் பெறலாம். உங்கள் கடன் விண்ணப்பத்தில் அவரின் வருமானத்தினை சேர்க்கலாம். எனினும் இது கடன் வழங்குபவரை பொறுத்தது. பெரும்பாலான வங்கிகள் இதனை அனுமதிக்கின்றன. மனைவியின் வருமானத்தை வைத்து நீங்கள் கடன் பெறும்போது நீங்கள் துணை விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்
இணை விண்ணப்பதாரர் அல்லது உத்தரவாதம்
கடன் பெற நீங்களும் உங்களின் ரத்த சொந்தமான உறவு ஒருவரும் கடன் விண்ணப்ப படிவத்திலும், கடன் ஒப்பந்தங்களிலும் கையெழுத்து போட வேண்டும். அவ்வாறு கையெழுத்து போடும் நபர், கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவராகவும், இணைக்கடன் விண்ணப்பதாரர் (co - applicant) ஆகவும் கருதப்படுவார்.
முதலீடுகள்
கடன் அளிக்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்கள் டிவிடெண்ட், வாடகை வருமானம் மூலம் கடனை திரும்ப செலுத்துவதற்கான அடையாளமாக காட்டலாம். ஆக இதன் மூலம் தொடர்ச்சியாக வருமானம் கிடைக்கும்பட்சத்தில் அதனை காரணம் காட்டி கடன் பெற்றுக் கொள்ளலாம்.
Microlending Platforms மூலம் பெறலாம்?
தற்போது சிறிய அளவில் கடன் பெற பல டிஜிட்டல் தளங்கள் உள்ளன. அவைகள் வேகமாகவும் குறைந்த அளவில் கடனை எளிதாக கொடுக்கின்றன. ஆக அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இது அவசர காலங்களில் உங்களுக்கு உதவும். பெரும்பாலான வங்கிகள் சரியான வேலையில்லாத பொழுது உங்களுக்கு கடன் கொடுக்க யோசிக்கின்றன. அந்த மாதிரியான சமயங்களில் இந்த கடன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications