வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி இந்தியா படு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கும் வேலையில் இந்திய நிதி சந்தைகள் பல வாய்ப்புகளை மக்களுக்கு வழங்குகின்றன. இந்தியாவில் வசிப்பவரானாலும் சரி, வெளிநாட்டில் வசிப்பவரானாலும் சரி தங்கள் பொன்னான செல்வத்தை அதிகரிக்க பல வழிகள் இந்தியாவில் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்பு தான் மியூச்சுவல் ஃபண்டுகள்.
ஏன் மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது? இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் கீழ் உள்ள அசட் அண்டர் மேனேஜ்மென்ட் (AUM) அதாவது மொத்தமாக முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத நிலவரப்படி மொத்தமாக நிர்வகிக்கப்படும் AUM மதிப்பு ரூ.64.53 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை பெரிதும் நம்புகின்றனர் என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் பல தனிப்பட்ட முதலீடாளர்கள் அதாவது பெரு முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீடாளர்கள் வரை தங்களுடைய சிறிய அல்லது பெரிய முதலீடுகளை ஒரு பொதுவான நிதியில் முதலீடு செய்கின்றனர். இது பிற்க்காலத்தில் அதிக வருமானத்தை வழங்குகிறது.
திரட்டப்படும் இந்த தொகையை நிதி மேலாளர்கள் ஒரே சொத்தில் முதலீடு செய்யாமல் பல்வேறு வகையான பங்குகள் மற்றும் பத்திரங்களில் பிரித்து பிரித்து முதலீடு செய்கிறார். இவ்வாறு பல சொத்துக்களில் முதலீடு செய்யப்படுவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் அபாயத்தை குறைப்பதாகும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் இந்தியாவில் நேரடி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது சற்று சிரமமாக இருக்கலாம். இதற்கு பல காரணங்கள் உண்டு. நேரமின்மை, சந்தை பற்றிய புதிய தெளிவு இல்லாமல் இருப்பது, இந்திய சட்ட திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் முதலீடு செய்ய முடியாமல் போகலாம்.
இந்தியாவில் இல்லாமலேயே நிபுணர்களின் மூலம் இந்திய நிதி சந்தையில் NRI-கள் முதலீடு செய்ய முடியும். அனைத்து நிர்வாகப் பணிகளையும் நிதி மேலாளர்கள் கவனித்துக் கொள்வதால் என்ஆர்ஐ-கள் கவலைப்படத் தேவையில்லை. வெளிநாடுகளில் இருந்து கொண்டே இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளை கருத்தில் கொள்ளலாம்.
முதலீட்டு பயணத்தை தொடங்குவதற்கு முன்பு NRI-கள், சில ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்தாக வேண்டும்.
ஸ்டெப் 1: முதலில் KYC செயல்முறையை முடிக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் விதிகளின்படி கேஒய்சி செயல் முறையை முடிக்க வேண்டும். கேஒய்சி சரிபார்ப்பு என்பது இந்திய நிதிச் சந்தையில் உள்ள அனைத்து புதிய முதலீட்டாளர்களுக்கும் கட்டாயம்.
கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள்: பாஸ்போர்ட், பான் கார்டு, வெளிநாட்டு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை தேவைப்படலாம்
ஸ்டெப் 2: உங்களுடைய வங்கி கணக்கை தேர்வு செய்ய வேண்டும். அடுத்ததாக ஒரு இந்திய கணக்கு NRI-களுக்கு தேவை. NRE அல்லது NRO கணக்கு மூலம் முதலீடு செய்யலாம். ஆனால் ஒவ்வொரு கணக்கு வகையின் தனித்துவமான அம்சங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து முதலீடு செய்யக்கூடிய என்ஆர்ஐ-கள் தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியம்.
ஸ்டெப் 3: முதலீடு செய்ய ஒரு தளத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். கேஒய்சி செயல்முறை முடிந்து, நீங்கள் எந்த தளத்தில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
myCAMS, Kfintech, MF Central, BSE இன் BSE STAR MF, NSE இன் MFSS, NSE இன் NMF-II தளம், EOPகள். இந்த தளங்கள் உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்களுடைய முதலீடுகளை சரியாக நிர்வகிக்க உதவும்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications