60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரியை சேமிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மூத்த குடிமக்கள் எவ்வாறு அதிகப்படியான வரியை சேமிக்க முடியும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
அதிகபட்ச வரிவிலக்கு : 60 முதல் 80 வயது உடைய மூத்த குடிமக்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் என அதிகபட்ச வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் என வரிவிலக்கு வரம்பு உள்ளது. எனவே மூத்த குடிமக்கள் எளிதாக வரியை சேமிக்கலாம்.

பிரிவு 80TTBஇன் கீழ் வரி விலக்கு : வங்கிகள் ,கூட்டுறவு சங்கங்கள் அல்லது தபால் நிலையங்களில் வைக்கப்படும் வைப்புத் தொகையின் மீதான வட்டிக்கு மூத்தக்குடி மக்கள் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு பெறலாம் என வருமான வரி சட்டத்தின் பிரிவு 80TTB அனுமதிக்கிறது .இந்த விலக்கு 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் விலக்கை காட்டிலும் அதிகம்.
நிலையான விலக்குகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் :2020 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய் நிலையான விலக்குகளில் மூத்த குடிமக்கள் பயனடையலாம். ஓய்வூதியம் பெறுபவர்கள் வேலையில் இல்லாவிட்டாலும் கூட இது வரிச் சுமையை குறைக்க உதவுகிறது.
மருத்துவ காப்பீட்டு ப்ரீமியம்: மூத்த குடிமக்கள் 80டி பிரிவின் கீழ் மருத்துவ காப்பீட்டு பிரிமியங்களுக்கு அதிக விலக்குகளை பெறலாம் .தங்களுக்கு அல்லது தங்கள் வாழ்க்கைத் துணைக்கு செலுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு ப்ரீமியங்களுக்காக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வரிச்சலுகை கோரலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் : இது அறுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட அரசின் சேமிப்பு திட்டமாகும். ஒரு நிலையான வட்டி விகிதத்துடன் பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான முதலீட்டு வழியை வழங்குகிறது .8.20% வட்டியுடன் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி சலுகை பெற உதவுகிறது.
வருங்கால வைப்பு நிதி: பிபிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பங்களிப்புகளை செய்யும்போது 80சி பிரிவின் கீழ் வரி விலக்குகளை பெறலாம். அதே போல தேசிய சேமிப்பு பத்திரத்திலும் மூத்த குடிமக்கள் 80சி பிரிவின் கீழ் வரி சலுகைகள் பெற முடியும்.
வரி சேமிப்புக்கான நிலையான வைப்புத்தொகை: வங்கிகள் வழக்கமாக வழங்கும் நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்யலாம். 80சி பிரிவின் கீழ் இதில் வரி சலுகைகளை பெறலாம்.
இந்த வழிமுறைகளை பயன்படுத்தி மூத்த குடிமக்கள் எளிதான முறையில் வரி விலக்குகளை பெற முடியும். உங்கள் பெற்றோரின் பெயரில் கூட இத்தகைய சேமிப்பு முறைகளை பின்பற்றி வரியை சேமிக்கலாம்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications