சென்னை: நீண்ட கால அடிப்படையில் சொத்து சேர்க்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போது பெரும்பாலும் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை தான் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் மாதந்தோறும் 10000 ரூபாய் முதலீடு செய்யும் ஒரு நபர் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் என்ற நிதி தொகுப்பை பெற முடியும் என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
எஸ்ஐபி முறையில் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் . இதன் மூலம் காம்பௌண்டிங் முறையில் நம்முடைய முதலீடானது பல மடங்கு உயர்கிறது. உதாரணமாக ஒரு நபர் மாதந்தோறும் 10000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொண்டால்.

15 ஆண்டுகளிலேயே அவரால் ஒரு கோடி ரூபாயை எட்டி விட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர் . 15 ஆண்டுகளில் அவர் செய்த முதலீடு 18 லட்சம், அவருக்கு கிடைத்த மொத்த நிதி 1, 00,27,601 ரூபாய் ஆகும். ஆண்டுக்கு 15 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்து முதலீடு செய்தால் இது சாத்தியம் என தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் தற்போது முன்னணியில் இருக்கும் சில மியூச்சுவல் ஃபண்டுகளை உதாரணமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் : ஆண்டுதோறும் 24.324% லாபம், 15 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் 1.35 கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும்
டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபண்ட்: ஆண்டுதோறும் 22.33% லாபம், 15 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் 1.16 கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும்
எப்படி 1 கோடி ரூபாயை உருவாக்குவது:
முதலில் சரியான மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்ய வேண்டும்
அந்த மியூச்சுவல் ஃபண்டு கடந்த காலங்களில் எவ்வளவு வருமானம் தந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்
மியூச்சுவல் ஃபண்டின் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ என்ன அந்த மியூச்சுவல் ஃபண்ட் என்னென்ன நிறுவனங்களில் எல்லாம் முதலீடு செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும்
உங்களுடைய ஆபத்து ஏற்பு காரணியும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்
ஸ்மால் கேப் நிறுவனங்கள் அதிக லாபம் தரும் ஆனால் ஏற்ற இறக்கங்களும் அதிகமாக இருக்கும்
தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டும்
ஆண்டுதோறும் எஸ்ஐபி தொகையை படிப்படியாக அதிகரித்தால் இன்னும் கூடுதலான நிதி தொகுப்பை பெற முடியும்.
15 ஆண்டுகளை நெருங்கும் போது குறைந்த ஆபத்துக் கொண்ட ஃபண்டுகளுக்கு அதிக தொகை ஒதுக்கி முதலீடு செய்ய வேண்டும்
இதையெல்லாம் சரியாக பின்பற்றினாலே 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி விட முடியும்.
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications