வேலைக்கு செல்ல கூடிய பலருக்கும் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு தேவையான பணத்தை தற்போது முதலே முதலீடு செய்து வைத்துவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு முதலீடு செய்ய விரும்பக் கூடிய நபர்களுக்கு பல்வேறு முதலீடு வாய்ப்புகளும் இந்தியாவில் பெருகி இருக்கின்றன.
நம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய போன் வாயிலாகவே பல்வேறு முதலீடுகளை நம்மால் நினைத்த நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. இவ்வாறு ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்ய போது பணவீக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது இன்றைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் நம்முடைய ஓய்வு காலத்தில் அந்த பொருளின் விலை எவ்வளவு இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்வது கட்டாயம் . அதன் அடிப்படையில் முதலீடு செய்தால் தான் ஓய்வு காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் .

ஓய்வு காலம் என வரும்போது நமக்கு வருமானம் இருக்காது ஆனால் செலவினங்கள் அதிகமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது . சம்பளமே எனக்கு 25 ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது ஆனால் ஓய்வு காலத்தில் எனக்கு 1 கோடி ரூபாய் வேண்டும் என எண்ணுபவர்கள் எப்படி பிரித்து முதலீடு செய்தால் அந்த இலக்கை எட்ட முடியும் என்பதை தற்போது பார்ப்போம் .
இதற்கு தான் 70 :15: 15 என்ற ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது. இது உலக அளவில் பின்பற்றப்படும் மிக எளிமையான ஒரு ஃபார்முலா. அதாவது ஒரு நபர் தன்னுடைய சம்பளத்தில் 70% தொகையை தன்னுடைய அடிப்படை வாழ்க்கை செலவினங்களான வாடகை, மளிகை பொருட்கள் மற்றும் பிற கட்டணங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . மீதமுள்ள 15 சதவீதத்தை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும் , மீதமுள்ள 15 சதவீதத்தை எமர்ஜென்சி ஃபண்டாக வைத்து கொள்ள வேண்டும்.
25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நபர் அதில் 17,500 ரூபாயை தன்னுடைய அடிப்படை செலவினங்களுக்கு ஒதுக்க வேண்டும். 3,750 ரூபாயை எமர்ஜென்சி ஃபண்டாக வைத்து கொள்ள வேண்டும், மீதமுள்ள 3,750 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த எஸ்ஐபி தொகையை ஒவ்வொரு ஆண்டும் 10% என உயர்த்த வேண்டும். ஸ்டெப் அப் முறையில் முதலீட்டை உயர்த்த வேண்டும்.
அந்த வகையில் பார்க்கும்போது அடுத்த 25 ஆண்டுகளில் இந்த தொடர வேண்டும் . உங்களுடைய முதலீடு ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தருகிறது என்றால் 25 ஆண்டுகள் முடியும்போது நீங்கள் செய்த முதலீடு 44 லட்சம் ரூபாய் உங்களுக்கு கையில் கிடைக்கக்கூடிய தொகை 1 கோடி ரூபாய். இந்த பணத்தையும் அப்படியே எடுத்துவிடாமல் தேவையான பணத்தை எடுத்து மீதமுள்ள பணத்தை அப்படியே காம்பவுண்டிங் முறையில் வளர விட்டால் அது தொடர்ந்து உங்களுக்கு செல்வத்தை உயர செய்யும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications