சென்னை: இந்திய வருமான வரி சட்டத்தின் படி, சொத்துக்களை விற்பனை செய்யும் போது அதில் கிடைக்கும் லாபத்துக்கு Capital Gain Tax எனப்படும் மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும். ஆனால் இதனை செலுத்தாமல் விலக்கு பெறுவதற்கான வழிகளும் இருக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
ஒரு சொத்தினை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இரண்டு வகையில் வரி விதிக்கப்படுகிறது. ஒன்று குறுகிய கால மூலதன ஆதாய வரி, மற்றொன்று நீண்ட கால மூலதன ஆதாய வரி.

குறிப்பிட்ட அந்த நிலத்தை வாங்கி இரண்டு வருடத்திற்குள் அதாவது 24 மாத காலத்திற்குள் விற்பனை செய்தால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியினை செலுத்த வேண்டியிருக்கும். இது வழக்கமாக ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும்போது செலுத்தினால் போதும்.
ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்டு விற்பனை செய்யும்போது உங்களுக்கு கிடைக்கும் லாபத்துக்கு நீண்டகால மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் நீண்டகால மூலதன வரியில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
பிரிவு 54f இன் படி, நீங்கள் நிலத்தை விற்பனை செய்த பிறகு அதில் கிடைத்த வருமானத்தை ஒரு வீட்டை வாங்குவதற்கோ அல்லது ஒரு வீட்டை கட்டுவதற்கோ பயன்படுத்தினால் வரிச்சலுகை பெற முடியும்.
அதேபோல பிரிவு 54 ec இன் படி நீங்கள் உங்களது மூலதன ஆதாயத்தை குறிப்பிட்ட நிதி பத்திரங்களில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அல்லது பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் இதில் 50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய முடியும். ஆனால் நிலத்தை விற்பனை செய்து ஆறு மாத காலத்திற்குள் இத்தகைய முதலீடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் மூலதன ஆதாய வரியை செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்.
சில பொதுத்துறை வங்கிகளில் கேபிடல் கெயின் அக்கவுண்ட் என்ற ஒரு திட்டமே இருக்கிறது. இந்த திட்டத்திங்களில் உங்களுக்கு நிலத்தின் விற்பனை மூலம் கிடைத்த லாபத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் வரி விலக்கு பெற முடியும்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications