கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பயத்தின் மத்தியில், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதாரம் 2008 - 2009ம் ஆண்டு அடைந்த வீழ்ச்சியை விட, தற்போது மோசமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் ஒர் அறிக்கையில் கூறியிருந்தது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் தற்போது எதிர்பாராத பொருளாதார தடையை சந்தித்து வருகிறது. இதனால் 2020-21ம் நிதி ஆண்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். அது மிகப் பெரிய வீழ்ச்சியாக இருக்கும்.
பணப்புழக்க பிரச்சனைகள் கடன் பிரச்சனைகளாக மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்தியா முழுக்க ஊரடங்கு
இப்படி ஒரு நிலையில் மக்களை பாரபட்சம் பாராமல் வாட்டி வதைத்து வரும் கொரோனா, குறிப்பாக வயதானவர்களை குறிவைத்து தாக்கி வரும் கொரோனா பெரும்பாலும், வயதில் முதியவர்களை அதிகமாக பலி கொண்டுள்ளது. இதனால் மேற்கொண்டு கொரோனாவின் தாக்கம் பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆர்பிஐ அனுமதி
இதற்கிடையில் மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ வங்கிகளுக்கு 3 மாத இஎம்ஐ-களுக்கு அவகாசம் வழங்க அனுமதி அளித்தது. இதனை ஒவ்வொரு வங்கிகளும் செயல்படுத்தி வரும் நிலையில், தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் இதனை செயல்படுத்தியுள்ளது. மேலும் அதன் விதிமுறைகள் என்ன? நிபந்தனை என்ன பல விவரங்களையும் கொடுத்துள்ளது. வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்க போகிறோம்.
இதனை தேர்வு செய்யுங்கள்
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளார்கள் 3 மாத இஎம்-ஐகளுக்கு அவகாசம் பெற OPT-IN அல்லது OPT-OUT என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது 3 மாதம் இஎம்ஐக்கான கால அவகாசத்தினை பெற முடியும்.
யார் யாரெல்லாம் சலுகை பெற முடியும்?
ஐசிஐசிஐ வங்கியின் இந்த சலுகையினை கிசான் கிரெடிட் கார்டு, சுய உதவிக் குழு கடன், விவசாயம் சார்ந்த (Farm Equipment) கடன், கூட்டு குழு கடன் (Joint Lending Group), வணிகக் கடன், தங்க நகை மீதான கடன், சிறு வணிக கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன் என பல வகையான கடன்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என தெரிவித்துள்ளது.
எப்படி இந்த சலுகையினை தேர்வு செய்வது?
ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் நீங்கள் இந்த கால அவகாசத்தினை பெற விரும்பினால், ஐசிஐசிஐ வங்கியின் https://www.icicibank.com/ தளத்தில் உள்ள Choose your option என்ற லிங்கினை கிளிக் செய்தால் https://buy.icicibank.com/moratorium.html?ITM=nli_cms_hp_1_static_EMI-moratorium-m_ChooseYourOption என்ற பேஜ் ஓபன் ஆகும். அங்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மெயில் ஐடியை கொடுத்து பதிவு செய்து உங்கள் விருப்பதினை தெரிவிக்கலாம்.
வட்டி உண்டு
நீங்கள் ஆர்பிஐ மூன்று மாதம் கால அவகாசத்தினை மட்டுமே இதன் மூலம் பெற முடியும். ஆனால் நிலுவையில் உள்ள கடனுக்கு ஏற்ப வட்டி வசூலிக்கப்படும். இது மார்ச் 1 முதல் மே 31வரையில் உங்களுக்கு கால அவகாசத்தினை வழங்கும். ஆக ஐசிஐசிஐ வங்கி மட்டும் அல்ல மற்ற வங்கிகளும் இதே செயல்முறையை நடைமுறைப் படுத்தியுள்ளன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications