மார்ச் மாதம் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், தொடர்ந்து பல வங்கிகளில் வீட்டு கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன.
ஆக இது வீடு கட்டவும், வாங்கவும் நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் எஸ்பிஐ, கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டியை குறைத்தன.
தற்போது இந்த லிஸ்டில் ஐசிஐசிஐ வங்கியும் இணைந்துள்ளது. இவ்வங்கியில் 10 வருடத்தில் இல்லாத அளவு வட்டி குறைந்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வளவு வட்டி விகிதம்?
ஐசிஐசிஐ வங்கியில் 75 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 6.7 சதவீதம் வட்டியாகும். இதே 75 லட்சம் ரூபாயக்கு மேல் வாங்கும் கடனுக்கு 6.75% வட்டியாகும். இது வட்டி விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதோடு இந்த விகிதம் மார்ச் 31 வரை அமலில் இருக்கும். ஆக இது வீடு கட்டவும், வீடு வாங்கவும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இது நல்ல வாய்ப்பு
தற்போது நுகர்வோரிடமிருந்து தேவை அதிகரித்துள்ளது. ஆக மக்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் இவ்வங்கியின் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது மக்களின் கனவு வீட்டை வாங்கவும், வாங்கவும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆக வீடு கட்ட நினைப்பவர்களுக்கும், வாங்க நினைப்பவர்களுக்கும் இது சரியான நேரமாக இருக்கும்.
வட்டி விகிதம் மிக குறைவு
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரெப்போ விகிதத்தினை கடந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் குறைந்து வருகின்றது. இதனால் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 15 ஆண்டுகளில் மிக குறைவாக உள்ளது. எனினும் இந்த வட்டி விகிதமானது அவரவர் கிரெடிட் ஸ்கோரினை பொறுத்து மாறுபடும்.
மற்ற வங்கிகளில் வீட்டு கடன்
எஸ்பிஐ, கோடக் மகேந்திரா வங்கிகளில் முறையே 6.7% மற்றும் 6.65% ஆகவும் வட்டி விகிதம் உள்ளது. இது வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் 800 மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கடந்த நவம்பர் மாதத்திலேயே ஐசிஐசிஐ வங்கியில் அடமானக் கடன் விகிதமானது 2 டிரில்லியன் ரூபாயை தாண்டியதாகவும் கூறியுள்ளது.