இனி கவலை வேண்டாம்.. வருமான வரி தொடர்பாக இந்த 3 மெயில் ஐடிக்களில் புகார் தெரிவிக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரி தொடர்பான புகார்களை தெரிவிக்க வருமான வரித்துறை சார்பில் 3 மெயில் ஐடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் முகமறியா வரி மதிப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

30 வருடம் கழித்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வேண்டும்.. SIP-யில் எவ்வளவு முதலீடு செய்யணும்..! 30 வருடம் கழித்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வேண்டும்.. SIP-யில் எவ்வளவு முதலீடு செய்யணும்..!

இந்த திட்டத்தில் கணிணி மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்யப்படும்.

குளறுபடிகள் குறித்து ஆய்வு

குளறுபடிகள் குறித்து ஆய்வு

மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் குளறுபடிகள் இருந்தால், அது குறித்து ஆய்வு செய்ய ஏதாவது ஒரு நகரில் உள்ள வருமான வரி அதிகாரிக்கு அனுப்பப்படும். அந்த அதிகாரி ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையானது, தன்னிச்சையாக வேறு ஒரு நகரைச் சேர்ந்த வருமான வரி உயர் அதிகாரிக்கு செல்லும்.

யார்? யார் என தெரியாது?

யார்? யார் என தெரியாது?

இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், வருமான வரி தொடர்பான குறைகளுக்கு, வருமான வரி தாக்கல் செய்பவர் வட்டார வருமான வரி அதிகாரியை நேரில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தில் யாருடைய வருமான வரி கணக்கு தாக்கலை, யார் ஆய்வு செய்கின்றனர் என்பது தெரியாது.

ஊழலுக்கு முற்றுப்புள்ளி

ஊழலுக்கு முற்றுப்புள்ளி

ஆக இவர் தெரிந்தவர்? தெரியாதவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது? இதனால் வரியை குறைத்து மதிப்பீடு செய்வது உள்ளிட்ட ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதற்கிடையில் தான் இந்த திட்டத்தில் வரி மதிப்பீடு தொடர்பான புகார்கள், அபராதம், மேல் முறையீடு ஆகியவற்றுக்கு மூன்று மெயில் ஐடி-க்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.

எந்த ஐடி எதற்கு?

எந்த ஐடி எதற்கு?

அதன்படி வரி மதிப்பீடு குறித்தான புகாரை samadhan.faceless.assessment@incometax.gov.in என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.

இதே அபராதம் தொடர்பான புகாருக்கு samadhan.faceless.penalty@incometax.gov.in என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.

இதே மேல்முறையீட்டுக்கு samadhan.faceless.appeal@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு கொள்ளலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஊக்குவிக்கும்

ஊக்குவிக்கும்

வருமான வரித்துறை தொடர்ந்து தொழில் நுட்பங்களை புகுத்தி வரும் நிலையில், அதிலுள்ள பிரச்சனைகளை களையவும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. 

அதோடு வருமான வரி தாக்கல் செய்பவர்களின் நலன் கருதி, வருமான வரித்துறை எடுத்து வரும் இது போன்ற நடவடிக்கைகள், வரி தாக்கல் செய்வோரை மேலும் ஊக்குவிக்கலாம். பிரச்சனைகளை எளிதில் கையாளலாம். 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tax வரி
English summary

Income tax dept provide 3 mail Ids for grievance under faceless assessment scheme

Income tax dept provide 3 mail Ids for grievance under faceless assessment scheme. Under the system, a taxpayer or an assessee is not required to visit an I-T department office or meet a department official
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X