வருமான வரிப் படிவங்களை நிரப்பி, தாக்கல் செய்ய வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
2019 - 20 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு, வரும் 30 நவம்பர் 2020-க்குள், வருமான வரிப் படிவங்களை முழுமையாக நிரப்பி தாக்கல் செய்ய வேண்டும்.
இப்போதே பலரும் தங்கள் வருமான வரிப் படிவங்களை சரியாக நிரப்பி சமர்பித்து, ரீஃபண்டுகளே வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். வருமான வரித் துறையினர், யாருக்கு எவ்வளவு ரீஃபண்ட் கொடுத்து இருக்கிறார்கள் என்பதைத் தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.
மொத்தக் கணக்கு என்ன
கடந்த ஆறு மாத காலத்தில் (01 ஏப்ரல் 2020 - 29 செப்டம்பர் 2020), சுமாராக 1.18 லட்சம் கோடி ரூபாயை, சுமாராக 33.54 லட்சத்துக்கும் மேற்பட்ட வரிதாரர்களுக்கு ரீஃபண்ட் தொகை கொடுத்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மத்திய வருமான வரித் துறை.
தனி நபர்களுக்கு
வருமான வரித் துறையிடம் தனி நபர்கள் (Individual), கூடுதலாக வரியைச் செலுத்தி இருந்தால், அவைகளை, ரீஃபண்ட் கொடுப்பது வருமான வரித் துறையினரின் வழக்கம். அப்படி தனி நபர்கள், கூடுதலாகச் செலுத்தி இருக்கும் 32,230 கோடி ரூபாய் வருமான வரியை, 31,75,358 வரி தாரர்களுக்கு ரீஃபண்டாகக் கொடுத்து இருக்கிறார்களாம்.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு
தனிநபர்களுக்கு எப்படி கூடுதலாக வசூலித்த தொகை அல்லது கூடுதலாகச் செலுத்திய தொகையை, வருமான வரித் துறை திருப்பிச் செலுத்துகிறதோ, அதே போல, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் திருப்பிச் செலுத்துகிறது வருமான வரித் துறை. இந்த ஏப்ரல் - செப் 2020 வரையான 6 மாத காலத்தில் 86,094 கோடி ரூபாயை, 1,78,540 கார்ப்பரேட் வரிதாரர்களுக்கு, ரீஃபண்டாகத் திருப்பிச் செலுத்தி இருக்கிறதாம்.
விரைவாகக் கிடைக்கிறது
முன்பை விட, வருமான வரி ரீஃபண்டுகள் விரைவாகக் கிடைப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனவே, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்கள், நவம்பர் மாதம் இறுதி வரை இழுத்தடித்துக் கொண்டு இருக்காமல், சட்டென ஐடிஆர் படிவத்தை சரியாக நிரப்பி, சமர்பித்து ரீஃப்ண்ட் பெறும் வழியைப் பாருங்கள். தாமதிக்க வேண்டாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications