ஐடி துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் அதன் வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அதன் பங்கு விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது.
இதன் காரணமாக பிஎஸ்இ-யில் முதல் ஒரு மணி நேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள், இன்ஃபோசிஸ் பங்கு விலை ஏற்றத்தால் 50,000 கோடி ரூபாயினை இதன் முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ளது.
அதன் பங்கு விலையானது தற்போது 9.01% ஏற்றம் கண்டு, 906.35 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இன்போசிஸ் பங்கு விலை
சரி என்ன காரணம்? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 11.4% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அதன் வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த நெருக்கடியான நேரத்தில் அதன் பங்கு விலையானது இன்று 15% அதிகரித்து, 952 ரூபாயாக அதிகரித்திருந்தது.
அதிக ஒப்பந்தம்
பெங்களுருவினை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 4,233 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,798 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்ஃபோசிஸ் இந்த காலத்தில் 1.74 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 1.65 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் அதிகரிப்பு
எல்லாவற்றுக்கும் மேலாக இன்ஃபோசிஸ் நிறூவனம் ரூபாய் சரிவினால் அதிக பலன் அடைந்துள்ளது. இதன் காரணமாக அதன் வருவாய் 23,665 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 8.5% அதிகம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்களின் இந்த காலாண்டு முடிவுகள் குறிப்பாக வளர்ச்சி, எங்கள் சேவைகளில் இருக்கும் வணிக முன்னுரிமை பற்றிய ஆழமான புரிதலுக்கும் ஒரு தெளிவான சான்றாகும்.
லாபத்திற்காக காரணம்
நிறுவனத்தின் அதிகளவிலான ஒப்பந்தம் நிறுவனம் லாபம் காண ஒரு கருவியாக இருந்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருவாய் நிலையானதாக இருக்கும் அல்லது நிலையான நாணய வளர்ச்சி அடிப்படையில் 2% வளர்ச்சியடையும். இயக்க விளிம்புகள் 2020- 21ம் ஆண்டில் 21 -23% ஆக இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நீங்கள் கோடிஸ்வரரா?
உண்மையில் இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்கியிருந்தால் அது உங்களுக்கு ஜாக்பாட் தான். குறிப்பாக நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் 527 ரூபாயாக இருந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. ஆக அப்போது வாங்கியிருந்தால் கூட, நாம் இன்று நல்ல லாபம் பார்த்திருக்க முடியும். இந்த ரணகளமான சூழலிலும் கூட, ஐடி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதால், சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும், வர்த்தக ரீதியில் இல்லை என்பதை இதில் இருந்தே உணர முடிகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications