ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் எப்போது என்ன நடக்கும்? என்று உறுதியாக சொல்லமுடியாத நிலையே இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மிக அவசியமாகும்.
கோவிட் -19 போன்ற நோய்களை இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளடக்கினாலும், முதல் 30 நாட்களில் காப்பீடு தொகையை திரும்பப் பெறுவது என்பது பெரும்பாலும் விலக்காகும். மனிதநேயம் நோய்களால் மறைக்கப்படும் தற்போதைய உலகச் சூழலில், ஒருவருக்கு அது தேவைப்படும் போது, எல்லா அம்சங்களும் உள்ள மருத்துவ காப்பீட்டை விரைவாக எடுப்பது மிக முக்கியம். அப்படி உங்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதே இந்த ஷார்ட் டெர்ம் பாலிசிகள்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் பாலிசி தாரர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்குவதற்காக, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம், அனைத்து பொதுக் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் ஒரு விரைவு வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. இது நிலையான இழப்பீடு மற்றும் நன்மைகளை அளிக்குமாறும் கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும் இது கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பயனுள்ள வகையில் பாலிசிகளை வழங்குமாறும் கட்டாயப்படுத்தியுள்ளது.
ஆயுள் மற்றும் பொது காப்பீட்டாளர்கள் நோயை குறிப்பாக உள்ளடக்கும் குறுகிய கால சுகாதார கொள்கைகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய அறிக்கைகளில் காப்பீட்டாளர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் மற்றும் 11 மாதங்கள் வரை ஹெல்த் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை விற்க முடியும் என்றும் கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.
சில நிறுவனங்கள் கொரோனாவினை அடிப்படையாகக் கொண்ட குழும பாலிசிகளையும் வழங்கி வருகின்றன. மேலும் வழக்கமான சுகாதாரத் திட்டங்களில் 30 நாட்களுக்கு எதிராக, 15 நாட்கள் காத்திருப்பு காலத்துடன் வழங்க வேண்டும். வாழ் நாள் புதுப்பித்தல், இடம்பெயர்வு, பெயர்வுத் திறன் போன்ற சுகாதார விதிகள் (lifelong renewability, migration and portability) இந்த தயாரிப்புகளுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அவை இழப்பீட்டு அடிப்படையில் அல்லது ஒரு நிலையான நன்மை அடிப்படையில் இருக்கலாம். ஆயினும் காப்பீட்டாளர்கள் ஒரு நிலையான நன்மை அடிப்படையில் மட்டுமே இதனை வழங்க முடியும்.
SecureNow.in நிர்வாக இயக்குனர் அபிஷேக் போண்டியா லைவ் மிண்ட் செய்தியில், நிலையான நன்மை திட்டங்களை வழங்கும் ஆயுள் காப்பீட்டாளர்கள், பாலிசிதாரர்கள் கோவிட் -19 திட்டங்களை தேர்வு செய்ய அனுமதிக்கும் என்றும் கூறியுள்ளார்.