டெல்லி: பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண் குழந்தைகளின் வளர்ச்சியினை வலியுறுத்தும் விதமாக கடந்த 2012 முதல் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தில் உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா. இது உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண பருவத்திலும் உதவும்.
பெண் குழந்தைகள் பெயரில் தொடங்கலாம்
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளின் பெயரில், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். இது அஞ்சலகத்தில் வழங்கப்படும் ஒரு பிரபலமான திட்டமாகும். இதனை வங்கிகளிலும் தொடங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு முதலீடு?
பெண் குழந்தைகளுக்கான இந்த பிரத்யேக திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது 7.6% ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதனை வருடா வருடமோ, அல்லது உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை கூட செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு
பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். எனினும் பெண் குழந்தைக்கு 18 வயதிற்கு மேல் திருமணம் ஆகும்போது தானாக இந்த கணக்கு மூடப்படும்.
வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்யும்போது மொத்தம் 22, 50,000 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். நீங்கள் தினசரி 411 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களது முதிர்வு தொகை, 65,93,071 ரூபாயாகும்.
முதலீட்டு தொகை - ரூ.22,50,000,
வட்டி வருமானம் - ரூ.43,43,071
வரி சலுகை
பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகை கிடைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கூட்டு வட்டியின் பலன் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பதால், மிகப்பெரிய வருவாய் கிடைக்கும். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒன்றாகவும் உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications