உங்களுடைய பணத்தை ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், அந்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மாதம்தோறும் உங்களுக்கு வருமானத்தை ஈட்டி தர வேண்டுமா? நம்முடைய தபால் நிலையத்திலேயே இதற்கான ஒரு சூப்பர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முதலீடு திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்துவிட்டால் போதும் ஒரு கணிசமான தொகை உங்களுடைய அக்கவுண்டில் வந்து கிரெடிட் ஆகி கொண்டு இருக்கும். இது மத்திய அரசு திட்டம் என்பதால் உங்களுடைய அசல் தொகையும் பாதுகாப்பாக இருக்கும், மாதம் தோறும் உங்களுக்கு வருமானம் வருவதும் கேரண்டி.

இந்தியாவில் தபால் நிலையங்கள் வாயிலாக பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான மற்றும் பிரபலமான ஒரு திட்டம்தான் மாதாந்திர வருமானம் தரக்கூடிய post office monthly income scheme எனப்படும் சேமிப்பு திட்டம். இதில் நாம் பணத்தை முதலீடு செய்துவிட்டால் போதும். நம்முடைய அசல் தொகை பாதுகாப்பாக இருக்கும், அதற்கான வட்டி தொகையை மாதந்தோறும் நமக்கு ஒரு வருமானமாக வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.
இந்தியாவை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு குடிமகனும் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய தபால் நிலையத்திற்கு சென்று இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிங்கள் அக்கவுண்ட் ஆகவும் முதலீடு செய்யலாம் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையிலும் முதலீடு செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையில் மூன்று பேர் வரை சேர்ந்து ஒரே கணக்கில் பணத்தை போட முடியும்.
தற்போது போஸ்ட் ஆபீஸின் மாதாந்திர வருமான முதலீட்டு திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி என்பது வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்யக்கூடிய பணத்திற்கு ஓராண்டுக்கு 7.4% என்ற அளவில் வட்டியை கணக்கீடு செய்து அதனை 12 மாதங்களுக்கும் பிரித்து உங்களுடைய கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். ஐந்தாண்டு காலம் இதற்கான முதிர்வு காலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கணக்கு தொடங்கிய அடுத்த மாதத்தில் இருந்து வட்டி வருமானம் உங்களுக்கு வரவு வைக்கப்படும்.
சிங்கிள் அக்கவுண்ட் என்றால் அதிகபட்சமாக ஒரு நபர் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும்போது உங்களுக்கு மாதம் தோறும் 5500 ரூபாய் வட்டி வருமானமாக கிடைக்கும். அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு இந்த பணம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
இதுவே ஜாயிண்ட் அக்கவுண்ட் எனப்படும் கூட்டு கணக்கு முறையில் நீங்கள் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில் உங்களுக்கு மாதந்தோறும் 9250 ரூபாய் வருமானமாக வந்து கொண்டிருக்கும். ஓய்வு பெற்றவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு சேமிப்பு திட்டம் இது. தங்களுடைய ஓய்வூதிய தொகையை இதில் முதலீடு செய்துவிட்டு மாதம் தோறும் வரக்கூடிய வருமானத்தை எடுத்து செலவுகளை பார்த்துக் கொள்ளலாம். நம்முடைய பணமும் பாதுகாப்பாக இருக்கும் அது சம்பாதித்து நமக்கு வட்டி வருமானமும் கொடுக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications