கடந்த 2021ம் ஆண்டிலேயே பல நிறுவனங்கள் தங்களது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்தன. இதுவே சிறு முதலீட்டாளர்களுக்கு கிடைத்த மிக நல்ல வாய்ப்பாக இருந்தது.
இதற்கிடையில் 2022ம் ஆண்டிலும் இந்த போக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட இரண்டு டஜன் நிறுவனங்கள் தங்களது ஐபிஓ மூலம் 44,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளன.
நிதி திரட்ட திட்டம்
இவ்வாறு ஐபிஓ மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ள நிறுவனங்கள் 44,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளன. 2021ல் மொத்தம் 63 நிறுவனங்கள் 1.2 லட்சம் கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளன. இந்த நிதி திரட்டலானது கொரோனா பரவலுக்கும் மத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓயோ ஐபிஓ
இது சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. சில்லறை வர்த்தகர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்புகளாக இருந்தன.
இந்த நிலையில் 2022லும் இந்த போக்கானது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளாக அமையலாம். குறிப்பாக ஹோட்டல் ஒங்கிணைப்பாளரான ஓயோ நிறுவனம் வரும் மார்ச் மாதத்தில் தனது பங்கினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓவில் 8,430 கோடி ரூபாய் நிதி திரட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி வில்மர் ஐபிஓ
இதே டெலிவரி (Delhivery ) நிறுவனம் 7,460 கோடி ரூபாய் நிதியினை பங்கு வெளியீட்டின் மூலம் நிதியினை திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதானி வில்மர் 4,500 கோடி ரூபாய் நிதியும், எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸ் 4,000 கோடி ரூபாயும், வேதாந்த் பேஷன்ஸ் 2,500 கோடி ரூபாயும், பரதீப் பாஸ்பேட்ஸ் நிறுவனம் 2,200 கோடி ரூபாய் நிதியும்,மெடாண்டா 2,000 கொடி ரூபாய் நிதியும் நிதிரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
எதற்காக இந்த நிதி திரட்டல்
மேலும் ஸ்கன்ரே டெக்னாலஜிஸ், ஹெல்தியம் மெட்டெக் மற்றும் சகஜானந்த் மெடிக்கல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கினை வெளியிடலாம் என எதிர்பார்ப்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட இந்த நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் வளர்ச்சியினை மேம்படுத்தவும், இன்னும் பல காரணங்களுக்காகவும் இந்த நிதியினை திரட்டவுள்ளன.