இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்களை போன்றே அஞ்சலகமும் பல இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகின்றது. ஆக நீங்கள் இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்க நினைத்தால், இது நல்ல சான்ஸ் எனலாம்.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டில் பல திட்டங்கள் உள்ளன. அந்த வகையில நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சலத்தின் கிராம சுரக்ஷா திட்டம் பற்றித் தான்.
பொதுவாக இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளில் இருந்து, குடும்பத்தினருக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு அளிக்கிறது. இப்படி பாதுகாப்பு அளிக்கும் திட்டங்கள் அரசின் திட்டமாக இருந்தால், இன்னும் பாதுகாப்பானது தானே. அதுவும் கூடுதலாக வரிச்சலுகையுடன் கிடைக்கும் என்றால் இன்னும் நல்லது தானே.
வயது வரம்பு
இந்திய அஞ்சலகம் மக்களின் நலனுக்காக, கிராம சுரக்ஷா அல்லது முழு ஆயுள் காப்பீடு (Gram Suraksha or Whole Life Assurance) என்ற திட்டத்தினை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 19, அதிகபட்ச வயது 55 ஆகும்.
குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாய் ஆகும்.
கடன் வசதி உண்டா?
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் 4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு.
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தினை 3 வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம்.
5 வருடங்களுக்கு முன்னதாக பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் கிடைக்காது.
எவ்வளவு பிரீமியம்
இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் சில விருப்பங்கள் உண்டு. அவை 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகளாகும்.
ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம் 1515 ரூபாயாக இருக்கும்.
இதே 58 வருடங்களுக்கு எனில் 1463 ரூபாயாக இருக்கும்.
அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும்.
முதிர்வு தொகை எவ்வளவு கிடைக்கும்?
இந்த அஞ்சலக திட்டத்தில் 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
இதே 58 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும்.
60 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
போனஸ் உண்டா?
தற்போதைய நிலையில் போன்ஸ் விகிதம் வருடத்திற்கு 60,000 ரூபாய் வரையில் கொடுத்து வருகின்றது. இது ஒரு வருடத்திற்கு 1,000 ரூபாய்க்கு 60 ரூபாய் போனஸ் ஆக கிடைக்கிறது.
இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு. ஆக பாலிசிதாரர் இறந்துவிட்டால், சலுகைகள் நாமினுக்கு கிடைக்கும்.