பெண் குழந்தைகள் உள்ளவர்கள் நிச்சயம் இந்த பாலிசியினை கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் எல்ஐசி-யின் இந்த பாலிசி பெண் குழந்தைகளின் படிப்புக்கும், திருமண செலவுக்கும் கவலையே பட வேண்டிய அவசியமிருக்காது.
மொத்தத்தில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இது பெண் குழந்தைகளுக்கு நிதி ரீதியாக மிக பெரிய பாதுகாப்பினை கொடுக்கும்.
எல்ஐசியின் கன்யாதான் பாலிசி
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பாலிசி எல்ஐசியின் கன்யாதான் பாலிசி பற்றி தான்.
எல்ஐசியின் கன்யாதான் பாலிசி காலம் 13 - 25 ஆண்டுகளாகும். இந்த பாலிசியினை எடுத்த பின் குறைந்தது 3 வருடங்களுக்காவது, நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும். கடைசி 3 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. இந்த பாலிசியினை 1 வயது குழந்தைக்கு கூட எடுத்துக் கொள்ளலாம். எனினும் குழந்தையின் தந்தைக்கு வயது 18 - 50 வயது இருக்க வேண்டும்.
எவ்வளவு க்ளைம் செய்யலாம்?
இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ளலாம். அதிகபட்ச தொகை என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பாலிசி காலம் உங்களது பெண் குழந்தையின் வயதுக்கு ஏற்ப குறைத்துக் கொள்ளலாம். அதோடு இந்த திட்டத்தில் உங்களது வருமானத்திற்கு ஏற்ப பிரீமியத்தினை கூட்டவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.
பயனுள்ள திட்டம்
சில பாலிசிகளில் ஆரம்பத்தில் என்ன பிரீமியம் செலுத்துகிறீர்களோ, இறுதிவரையில் அதனையே செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் கன்யாதான் திட்டத்தில் உங்கள் கையில் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிகரித்தும் செலுத்தலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வரி விலக்கு
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏற்றதொரு பாலிசி என்ற நிலையில், இந்த பாலிசி 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே போல் மெச்சூரிட்டி அல்லது இறப்பின் மூலம் கிடைக்கும் க்ளைமுக்கும் பிரிவு 10 (10D)யின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.
கல்வி & திருமணத்திற்கு ஏற்றது
பாலிசிதாரர், பாலிசி எடுத்த பிறகு எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், குடும்பத்தினர் மீத பிரீமியத்தினை செலுத்த வேண்டியதில்லை. அதோடு ஒவ்வொரு வருடமும் எல்ஐசி குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாயினை கொடுக்கும். மேலும் பாலிசி முடிந்த பின்னர் நாமினிக்கு 27 லட்சம் ரூபாய் கொடுக்கும். ஆக இந்த காப்பீட்டுக் கொள்கை பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு மிக ஏற்றது.
ரூ.27 லட்சம் எப்படி?
இதே நீங்கள் தினசரி 121 ரூபாய் அல்லது மாதம் 3,600 ரூபாய் பிரீமியமாக செலுத்தினால், 25 வருடம் செலுத்தியிருந்தால், 25 வருடங்களுக்கு பிறகு 27 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். உங்கள் பெண் குழந்தைகளுக்கு திருமணமே முடிந்தாலும் அதன் பிறகும் பிரீமியத்தினை செலுத்தலாம்.
கடன் வாங்கலாமா?
எல்ஐசியின் இந்த கன்யாதான் பாலிசியினை பிணையமாக வைத்து கடன் பெற முடியும். எனினும் தொடர்ந்து 3 வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால் மட்டுமே கடன் பெற முடியும். இந்த பாலிசி எடுத்த 13 மாதங்களுக்குள் தற்கொலை செய்து கொண்டால் க்ளைம் செய்ய முடியாது.இந்த பாலிசியினை NRIகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications