மக்களின் நிதி நலனுக்காக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பணி ஓய்வுக்குப் பின் தனி நபர்களுக்கு கௌரவான எதிர்காலத்தையும் நிதி ஆதாரத்தையும் அவர்களது பணிக்காலத்துக்கு பின்னரும் இந்தத் திட்டம் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் நிச்சயமாக பாதுகாப்பான, அதிகபட்ச பலனைப் பெறலாம். அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டம் உங்கள் வயதுக்கு ஏற்றார்போல ஒரு முதலீடு திட்டமாகும்.
நீங்கள் ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000 லிருந்து ரூ.5000 வரை பென்ஷன் பெறலாம். இந்த திட்டம் கவர்ச்சியான, பாதுகாப்பான பலன்களுக்கு உத்தரவாதமாக உள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்த அடல் பென்ஷன் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டது. முறைசாரா துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் இதில் முதலீடு செய்யலாம். இப்போது 18 முதல் 40 வயது நிரம்பிய அனைத்து இந்திய மக்களுக்கும்
இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தவர்கள் தங்களது 60 வயதுக்குப் பின்னர் பென்ஷனைப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக உங்கள் மனைவிக்கு 25 வயது இருந்தால் நீங்கள் மாதாமாதம் ரூ.226ஐ அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் மனைவிக்கு 39 வயது நிரம்பியிருந்தால் ரூ.792ஐ அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
இத்துடன் மாதாந்திர பென்ஷன் உறுதி செய்யப்பட்ட நிலையில் முதலீட்டாளர் இறந்து விட்டால் அவரது வாரிசுக்கு ரூ.5.1 லட்சம் தரப்பட்டு அத்துடன் மாதாந்திர பென்ஷன் முழுமையாகவும் வழங்கப்படும்.
அடல் பென்ஷன் திட்டத்தில் ஒருவர் 18 வயதில் சேர்ந்திருந்தால் அவர் மாதம் ரூ.210 செலுத்த வேண்டும். இதன் மூலம் அவரது 60 வயதுக்குப் பின் ரூ.5000 பென்ஷன் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பதாரருக்கு ஒரு வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.
ஒருவருக்கு ஒரு அடல் பென்ஷன் அக்கவுன்ட்தான் இருக்கும். எவ்வளவு விரைவில் இந்தத் திட்டத்தில் சேருகின்றீர்கள் அந்தளவுக்கு அதிகமான பலன்களைப் பெறலாம். அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரி சட்டம் 80சி மூலம்ரூ.1.5 லட்சம் வரிச்சலுகை கிடைக்கும்.
எதிர்பாராத விதமாக இந்தத் திட்டத்தில் இணைந்திருந்தவர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications