சென்னை: இந்தியாவில் தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த பொருட்கள் விலை மதிக்க முடியாதவையாக இருக்கின்றன . வீட்டில் தங்கம் இருந்தால் சற்று கூடுதல் பாதுகாப்போடு நாம் இருக்க வேண்டியது அவசியமாகறது. குறிப்பாக திருட்டு பயம் அதிகமாக இருப்பதால் தங்கத்தை பாதுகாப்பது பெரிய வேலையாக தான் இருக்கிறது. தங்கத்தை லாக்கரில் வைப்பது சிறந்ததா அல்லது வீட்டிலேயே வைத்திருப்பது சிறந்ததா என்பதை நாம் இந்த கட்டுரையில் காணலாம்.
வீடுகளில் தங்க நகைகளை வைத்திருக்கும் போது வீட்டினை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்லும்போது நம் எண்ணம் முழுவதுமே வீட்டில் இருக்கும் தங்கத்தின் மீதுதான் இருக்கும். யாரேனும் வீடு புகுந்து திருடி விடுவார்களோ என்ற அச்சத்துடன் இருக்க வேண்டும். ஆனால் நாம் தங்கத்தை வங்கி லாக்கரில் வைத்து விட்டால் இந்த அச்ச உணர்வு நமக்கு தேவையில்லை. பொதுவாக வங்கி லாக்கர்களில் தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், காப்பீட்டு ஆவணங்கள், உயில் உள்ளிட்டவற்றை நாம் வைக்கலாம்.

லாக்கரில் வைக்கப்படும் போது திருட்டிலிருந்து அவற்றை பாதுகாக்கிறோம் மற்றும் தீ விபத்து உள்ளிட்ட பிற நிகழ்வுகளில் இருந்தும் அவற்றை பராமரிக்கிறோம். நமது தங்க நகை மற்றும் பிற ஆவணங்களை வங்கிகளில் ஒரு லாக்கரை வாடகைக்கு எடுத்து அதில் சேமித்து வைத்துக் கொள்கிறோம்.
அதனை பாதுகாப்பாக பராமரிப்பதற்காக அந்த வங்கிக்கு நாம் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருகிறோம். நமக்கு தேவைப்படும் சமயங்களில் வங்கிக்கு சென்று அந்த நகைகளையும் ஆவணங்களையும் நம்மால் அணுக முடியும். எனவே இவை பாதுகாப்பாக இருக்கிறது என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
பொதுவாக இது போன்ற நகை மற்றும் ஆவணங்களை லாக்கரில் வைப்பதற்கு புகழ்பெற்ற மற்றும் மிகச் சிறந்த பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட ஒரு வங்கியை தேர்வு செய்வது அவசியம். வங்கியின் செயல்பாட்டு நேரம் மற்றும் இந்த லாக்கர்களுக்காக வங்கிகள் நம்மிடம் வசூலிக்கும் கட்டணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் வங்கிகளை தேர்வு செய்ய வேண்டும்.
வங்கிகளுக்கு சென்று அங்கே கிடைக்கும் லாக்கர்கள் குறித்தும், அதற்கான கட்டணங்கள் குறித்தும் விசாரித்துவிட்டு முடிவெடுத்து உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் நாம் நமது நகைகளையும் ஆவணங்களையும் லாக்கர்களில் பத்திரமாக வைக்க முடியும்.லாக்கர் வசதி ஏற்பட்டவுடன் வங்கியானது 2 சாவியை வழங்கும். ஒரு சாவி உங்களிடமும் மற்றொரு சாவி வங்கிய இடமும் இருக்கும். வங்கி லாக்கரை திறக்கும் போது இரண்டு சாவியும் அங்கே கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது முக்கியமானது.
அதுவே தங்க நகைகளை வீட்டில் வைத்திருப்பதில் கிடைக்கும் சவுகரியம் விரும்பிய நேரத்தில் அந்த நகைகளை நாம் அணிந்து கொள்ள முடியும். லாக்கரில் இருந்தால் வங்கி செயல்பாட்டு நேரத்தில் மட்டுமே நேரில் சென்று நகைகளை அணுக முடியும். ஆனால் பாதுகாப்பு என வரும்போது வங்கி லாக்கரில் வைப்பது தான் சிறந்தது.
ஒருவேளை வீட்டிலேயே உங்களது தங்க நகைகளை வைத்திருக்க விரும்பினால் அதற்கான காப்பீடு திட்டங்களை எடுத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். இதன் மூலம் நகை திருடு போவது, தீ விபத்தால் சேதமடைவது மற்றும் இயற்கை பேரிடர்களால் சேதம் அடைவது ஆகியவற்றுக்கு எதிராக உங்களுக்கு காப்பீடு கிடைக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications