நீங்கள் ஒரு மத்திய அரசு அல்லது மாநில அரசு ஊழியர் என்றால் கோடக் மஹிந்திரா வங்கி செம சலுகை ஒன்றை உங்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சலுகை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
ஏற்கனவே மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் கோடக் மஹிந்திரா வங்கி தற்போது மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இலவச சேலரி கணக்கை தொடங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
கோடக் நேஷன் பில்டர்ஸ் என்ற சம்பள கணக்கு மத்திய மற்றும் மாநில அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் இது முழு அளவிலான சேவை நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலரி கணக்கு
இந்த சேலரி கணக்கில் வாழ்நாள் முழுவதும் ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ளும் வசதி உண்டு என்றும் அதேபோல் சேவை கட்டணம் இல்லாத லாக்கர் வசதி, மாதம் இரண்டு லட்ச ரூபாய் வரை இலவச ரொக்க வைப்பு மற்றும் ஒரு மாதத்திற்கு 30 இலவச பரிவர்த்தனை ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கோடக் தெரிவித்துள்ளது.
ரூபே டெபிட் கார்டு
மேலும் ஊழியர்களுக்கு இலவசமாக ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச ஆட்-ஆன் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
விபத்து காப்பீடு
மேலும் இந்த கணக்கில் 50 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு திட்டமும் அடங்கும் என்பது இந்த காப்பீட்டில் சாலை, ரயில் விபத்து காரணமாக நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 30 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சலுகை
இதுகுறித்து கோடக் மஹிந்திரா வங்கியின் குழுமத் தலைவர் விராட் திவான்ஜி கூறியபோது கோடாக் நேஷனல் பில்டர் சம்பள கணக்கு நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்றும் அவர்களை பாராட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கேஷ்பேக் வசதி
இந்த நிலையில் இந்த சேலரி கணக்கில் சேரும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டில் 5 சதவீதம் வரை கேஷ்பேக் வசதி மற்றும் ஒருசில இந்திய பிராண்டுகள் தரும் சலுகைகள் வழங்கப்படும் என்றும் விராட் திவான்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் கல்வி காப்பீடு
இதுகுறித்து நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி பிரவீனா ராய் கூறும்போது, 'இந்த திட்டத்தில் காப்பீட்டு தொகை மற்றும் குழந்தைகளுக்கான கல்வி காப்பீடு உள்ளிட்ட சில நன்மைகள் இருப்பதாகவும் இவை அரசு ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேலரி கணக்கு அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications