இந்தியர்கள் மத்தியில், வைப்பு நிதிகள் (Fixed Deposits) இன்றும் மிகவும் நம்பகமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன. இவை உத்தரவாதமான வருமானத்தையும், பணம் பாதுகாப்பையும் தருவதே பெரும்பாலான முதலீட்டாளர்களின் முதல் விருப்பமாக இருக்க காரணம். குறிப்பாக வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் தான் வங்கிகள் வழங்கும் வைப்பு நிதிகள்.
ஃபிக்சட் டெபாசிட்: குறைந்தபட்சம் 7 நாட்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வைப்பு நிதி திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த கட்டுரையில் ஓராண்டுக்கான வைப்பு நிதி திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள போகிறோம். வழக்கமாக, பெரும்பாலான கடன் வழங்கும் நிறுவனங்கள் ஓராண்டு வைப்பு நிதி திட்டங்களுக்கு ஒரே மாதிரியான வட்டி விகிதங்களை அறிவிப்பது போலத் தோன்றினாலும், சிறிய அளவிலான வேறுபாடுகள் இருக்கும். இந்த சிறிய மாறுதல்கள் கூட காலப்போக்கில் கணிசமான லாபத்தை ஈட்ட உதவும்.

எந்த வங்கியில் அதிக வட்டி: வங்கிகள் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு வட்டியையும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சற்றே கூடுதல் வட்டியும் வழங்குகின்றன. வங்கி வலைத்தளத் தரவுகளின்படி, சில முக்கிய வங்கிகள் ஓராண்டு வைப்பு நிதிகளுக்குப் போட்டியிடும் வட்டி விகிதங்களை வழங்குகின்றன. உதாரணமாக, HDFC வங்கி ஜூன் 25, 2025 முதல், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 6.25% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 6.75% வட்டியையும் வழங்குகிறது. ICICI வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியும் இதே விகிதங்களை அளிக்கின்றன.
எஸ்பிஐ: ஃபெடரல் வங்கி சற்று அதிக வருமானத்தை வழங்குகிறது. இது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 6.40% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.90% வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஜூலை 15 முதல் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 6.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.75% வட்டி வழங்குகிறது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஆகஸ்ட் 20 முதல் சாதாரண மக்களுக்கு 6.40% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.90% என வட்டி வழங்குகிறது.
வட்டி வருமானம்: ஓராண்டு வைப்பு நிதிகளில், சிறிய வட்டி விகித வேறுபாடு கூட காலப்போக்கில் கணிசமான வருமானத்தை ஈட்டித் தரும். குறிப்பாக, அதிக தொகையை முதலீடு செய்பவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இது பெரும் பயன் தரும். மூத்த குடிமக்கள் சாதாரணமாகவே சற்றே அதிக வட்டி விகிதங்களைப் பெறுவதால், அவர்களுக்கு லாபமும் அதிகமாக இருக்கும்.
பாதுகாப்பான முதலீடு: வங்கிகள் வழங்கும் ஓராண்டு கால வைப்பு நிதி திட்டங்களுக்கான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வட்டி விகிதங்களுக்கு இடையே வெறும் 0.15% வித்தியாசம் இருந்தாலும், இந்த சிறிய வித்தியாசம் கூட சேமிப்பாளர்களுக்கு கூடுதல் வருவாயை அளிக்கும். எனவே, பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோருக்கு வைப்பு நிதிகள் ஒரு நம்பகமான தேர்வாக இருக்கின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு இது நிலையான ஒரு முதலீட்டு வாய்ப்பாக உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications