இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்ஐசி காலத்திற்கு ஏற்ப புது புது காப்பீடு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகளுக்காக எல்ஐசி அம்ரித்பால் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் பலன்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
அம்ரித்பால் திட்டம்: குழந்தைகளின் மேற்படிப்பு செலவுகளுக்கு தேவையான பணத்தை சேர்த்து வைக்கும் வகையில் அம்ரித்பால் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பிறந்து 30 நாட்கள் ஆன குழந்தைகள் தொடங்கி 13 வயது வரையிலான குழந்தைகள் வரை இணைய முடியும்.

அதே போல முதிர்வு காலமானது குழந்தைகள் 18 வயதை அடைந்ததில் இருந்து 25 வயதினை எட்டும் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச பாலிசி காலம், சிங்கிள் ப்ரீமியத்துக்கு 5 ஆண்டுகளாகவும், லிமிடெட் ப்ரீமியத்துக்கு 10 ஆண்டுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்ச பாலிசி காலம் சிங்கிள் ப்ரீமியம் மற்றும் லிமிடெட் ப்ரீமியம் இரண்டிற்கு 25 ஆண்டுகளாகும்.
ப்ரீமியம் செலுத்தும் காலம் லிமிடெட் ப்ரீமியத்துக்கு 5, 6 மற்றும் 7 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே சிங்கள் ப்ரீமியத்துக்கு ஒரே முறை ப்ரீமியம் செலுத்தினாலே போதும்.
அம்ரித்பால் திட்டத்தில் குறைந்தபட்ச உத்தரவாத தொகை 2 லட்சம் ரூபாய் ஆகும். அதிகபட்ச தொகை என வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
குழந்தைக்கு 18 வயது நிரம்பிய உடன் இந்த பணத்தை திரும்ப எடுக்க முடியும். அதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையுடன் கூடுதல் பலன்களும் கிடைக்கும். ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் இருக்கு உத்தரவாத தொகையில் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 80 ரூபாய் என கூடுதலாக சேர்க்கப்படும். பாலிசி செலுத்த தொடங்கிய ஆண்டு முதல் முதிர்ச்சி அடையும் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் இது சேர்க்கப்படும்.
உதாரணமாக உங்களுக்கான உத்தரவாத தொகை 5 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். அது ஆயிரங்களாக பிரிக்கப்பட்டால் 500 என்ற எண்ணிக்கை வரும். எனவே 500 ஆயிரங்களுக்கு தலா 80 ரூபாய் எனில் 40 ஆயிரம் ரூபாய் அடிப்படை உத்தரவாத தொகையில் சேர்க்கப்படும். இது முதிர்வு காலம் வரை தொடரும். எனவே மேற்படிப்பு மற்றும் பிற செலவுகளுக்கு இதில் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்கிறது எல்ஐசி.
முதிர்வு தொகையை தவணைகளாக 5, 10 அல்லது 15 ஆண்டுகள் என பிரித்து வாங்கி கொள்ளலாம். இந்த காப்பீடு திட்டத்தில் ரிஸ்க் கவரும் இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு 8 வயது நிரம்பிய பிறகு ரிஸ்க் கவரேஜூம் கிடைக்கும்.
அதுமட்டுமல்ல அதிகபட்ச அடிப்படை தொகையை தேர்வு செய்பவர்களுக்கும், ஆன்லைன் மூலம் காப்பீட்டை பெறுபவர்களுக்கும் தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிசி தொடங்கிய 2 ஆண்டுகளில் அதன் மீது கடன் கூட பெற முடியும் என எல்ஐசி அறிவித்துள்ளது.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications