பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற பல்வேறு வகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகின்றது.
அதில் இன்று நாம் பார்க்கவிருப்பது எல்ஐசியின் புதிய பீமா பச்சாட் என்பது, இணைக்கப்படாத சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டமாகும்.
சரி வாருங்கள் இந்த புதிய பீமா பச்சாட் திட்டத்தின் விவரங்களை பற்றி பார்க்கலாம்.
இது ஒரு மணி பேக் பிளான்
LIC-யின் புதிய பீமா பச்சாட் திட்டம் ஒரு பணத்தை திரும்பப் பெறும் திட்டமாகும் (Money Back plan). இந்த பாலிசியில் தொடக்கத்திலேயே மொத்த பிரீமியமும் செலுத்த வேண்டியுள்ளது. இந்த பாலிசியில் குறிப்பிட்ட காலங்களில் உயிர்வாழும் சலுகைகளை செலுத்துவதோடு, பாலிசி காலத்தின் போது மரணத்திற்கு எதிரான நிதி பாதுகாப்பையும் இந்த திட்டம் வழங்குகிறது.
வயது தகுதி
இந்த திட்டத்தில் நுழைவு வயது 15 - 66 வயதாகும். இந்த பாலிசியில் குறைந்தபட்ச உறுதி தொகை 35,000 ரூபாயாகும். இந்த பாலிசியின் கால, 9, 12 மற்றும் 15 ஆண்டுகளாகும். இந்த திட்டம் ஒற்றை பிரீமியம் செலுத்தும் ஒரு திட்டமாகும். இந்த பாலிசிக்கு எதிரான கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
இறப்பு நன்மை உண்டு
முதல் ஐந்து ஆண்டுகளில் பாலிசிதாரர் இறந்தால் இன்சூரன்ஸ் தொகை உறுதி செய்யப்படும். இதே ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் பாலிசிதாரர் இறந்தால், பாலிசிதாரருக்கு லாயல்டி சேர்த்தலுடன் தொகை உறுதி கிடைக்கும். ஆக பாலிசிதாரருக்கு எந்த வகையில் பார்த்தாலும் தங்களது தொகை உறுதி என்பதால், இந்த பாலிசி நல்லதொரு சேமிப்பு திட்டமாக உள்ளது.
வாழ்நாள் பலன் உண்டு
இந்த திட்டத்தில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பணம் கிடைக்கும். பாலிசிதாரர் மொத்த காப்பீட்டுத் தொகையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தவணைத்தொகைக்கு இந்திய வருமான வரி சட்டம் 80Cயின் கீழ் வருமான வரிச்சலுகை அளிக்கப்படும். இதே காப்பீட்டாளர் இந்த திட்டத்தில் இருந்து விடுபெற நினைத்தால், ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் தவணைத்தொகையில் 90% திரும்ப கிடைக்கும்.