இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு எண்ணம், இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது ஒரு நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். வயதான காலத்தில் யாரையும் சாராமல் குறிப்பாக நிதி ரீதியாக சாராமல் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
அப்படி ஒரு திட்டத்தினை எல்ஐசி கொண்டுள்ளது. அதுவும் ஒற்றை பிரீமியம் மூலம் மாத மாத வருமாமனம் கிடைக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது.
இது மாத சம்பளம் போல வயதான காலகட்டத்தில் கிடைப்பதால், வயதானவர்கள் யாரையும் நிதிக்காக சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
பென்ஷன் திட்டம்
ஆக இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மட்டும் அல்ல, தனியார் ஊழியர்கள், பெண்கள், வயதானவர்கள் என பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனினும் எல்ஐசி-யின் சாரல் திட்டத்தின் மூலம் இந்த சலுகையினை பெற முடியும். இது பாதுகாப்பானதாக இருப்பதோடு சந்தை அபாயமும் இருப்பதில்லை.
சாரல் பென்ஷன் திட்டம்
எல்ஐசி-யின் சாரல் பென்ஷன் திட்டத்தின் ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதும். பாலிசியினை தொடங்கும்போது ஆண்டுத்தொகை விகிதம் உத்தரவாதம் அளிக்கப்படும்.இதனால் வட்டி அதிகரிக்கப்பட்டால் பலன் அதிகமாகவும், வட்டி குறைத்தால் பலன் குறையும் என்ற பிரச்சனையும் இல்லை.
வயது வரம்பு
இந்த பாலிசியினை 40 வயது எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 80 வயது வரையில் இந்த சாரல் பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம். பாலிசிதாரர் இந்த திட்டத்தினை எடுக்கும்போது அதிக தொகையினை ஒரே பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பாலிசிதாரர் அவரின் வாழ் நாள் முழுவதும் ஒரு வருமானத்தினை பெறலாம்.
பாலிசிதாரர் இறக்கும் வரை பலன்
முதல் வகை தனி நபர் பாலிசி - 100% திரும்ப தரும் பிரீமியம். இந்த பாலிசியில் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையில் பலனை பெற்றுக் கொள்ளலாம். பாலிசிதாரர் இறந்து விட்டால் பலன் கிடைக்காது. அடிப்படை பிரீமியத் தொகை மட்டும் நாமினிக்கு திரும்ப செலுத்தப்படும்.
ஜாய்ண்ட் லைஃப் பாலிசி
இரண்டாவது திட்டத்தில் கணவன், மனைவி என இருவருக்கும் கவரேஜ் கிடைக்கும். முதன்மை ஓய்வூதியதாரர் இருக்கும் வரையில் அவருக்கு ஓய்வூதியம் கிடைகும். அவர் இறந்த பிறகு அவரின் மனைவிக்கு வாழ் நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைகும். அவர் இறந்த பிறகு நாமினிக்கு அடிப்படை பிரீமியத் தொகை மட்டும் நாமினிக்கு திரும்ப செலுத்தப்படும்.
எவ்வளவு செலுத்தலாம்?
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12,000 ரூபாய் தொகையாவது செலுத்த வேண்டும். அதாவது மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் இல்லை. ஆண்டு ஆரையாண்டு, மாதாந்திர முறைகளில் தொகையை செலுத்தவும் வசதி உண்டு.
கடன் வசதி உண்டா?
இந்த பாலிசியினை பெற்ற ஆறு மாதத்திற்கு பிறகு கடன் பெறலாம். 6 மாதத்திற்கு பிறகு சரண்டர் செய்யலாம். பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்து விட்டால், நாமினி பிரீமியம் தொகையை பெறுவார்கள். இந்த பாலிசியில் முதிர்ச்சி பலன் என்பது கிடையாது. மொத்தத்தில் பாலிசியின் மூலம் மாத மாதம் வருமானம் கிடைக்கும் ஒரு திட்டமாக உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications