தற்போது முதலீடுகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற குழப்பம் வந்துவிட்டது. இந்தியாவில் வங்கிகளை விட அஞ்சல் அலுவலகங்களில் கூடுதல் வட்டியுடன் கூடிய சிறந்த முதலீடு திட்டங்கள் கிடைக்கின்றன. அவை குறித்து சுருக்கமாக பார்க்கலாம்..
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு(Post office savings account): ரூ.500 டெபாசிட் செய்து அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஆண்டுதோறும் இந்த கணக்கில் உள்ள தொகைக்கு 4 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit): குறைந்தபட்சம் ரூ, 1000 அல்லது ரூ.100இன் பெருக்கல் தொகையில் கணக்கு தொடங்கி வரவு வைக்கலாம். இதில் முதலீடு செய்வதற்கு உச்ச வரம்பே இல்லை. டெபாசிட்டின் கால அளவை பொறுத்து வட்டி தீர்மானிக்கப்படுகிறது. ஒராண்டு டெபாசிட்டிற்கு 6.9% வரையும், 2 ஆண்டுகளுக்கு 7% வரையும், 3 ஆண்டுகளுக்கு 7.1% வரையும் , 5 ஆண்டுகளுக்கு 7.5% வரையும் வட்டி வழங்கப்படுகிறது.
5 ஆண்டுகள் ஆர்.டி. திட்டம் (5-year recurring deposit scheme): அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் இந்த ஆர்.டி. திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100இல் இருந்து சேமிக்க தொடங்கலாம். இந்த முதலீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior citizen savings scheme): 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சேமிப்பு திட்டம் இது. குறைந்தபட்சம் ரூ.1,000இல் தொடங்கி ரூ.30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இதன் லாக் இன் காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 % வட்டி கிடைக்கும்.
மாதாந்திர வருவாய் கணக்கு திட்டம் (Monthly income account): அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் மற்றொரு சிறு சேமிப்பு திட்டம் இது.குறைந்தபட்சம் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் சேமிக்கலாம், இதில் 7.4% வட்டி கிடைக்கிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC (VIII) issue): குறைந்தபட்சம் ரூ.1,000முதலீடு செய்து இந்த திட்டத்தில் இணையலாம். இதில் முதலீடு செய்யும் தொகைக்கு உச்சவரம்பு இல்லை. ஆண்டுதோறும் கூட்டு வட்டி கணக்கில் 7.7% வட்டி கிடைக்கிறது.
பிபிஎஃப் (PPF): குறைந்தது ரூ.500 முதலே இதில் முதலீடு செய்யலாம். ஆனால் ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதில் கூட்டு வட்டி முறையில் ஆண்டுக்கு 7.1 % வட்டி கிடைக்கிறது.
கிஷான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra): ஆண்டுதோறும் கூட்டு வட்டி முறையில் 7.5% வட்டி கிடைக்கிறது. இதில் ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. நீங்கள் முதலீடு செய்யும் பணம் 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications