மத்திய பட்ஜெட் சீசன் வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டை அதிகரிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 2023 பட்ஜெட்டில் பெண்களுக்காக மத்திய அரசு மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இது பெண்களின் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்கச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான திட்டமாகும். இத்திட்டத்தின் சிறப்பம்சமே குறுகிய காலத்திற்கு திட்டத்தால் வழங்கப்படும் உத்தரவாதமான வட்டியாகும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த திட்டத்தில் நீங்கள் நிச்சயமாக பயனடையலாம். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000 ஆகும். அதிகபட்ச முதலீடு 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் 7.5% தனிப்பட்ட வட்டியை செலுத்துகிறது. 2 வருட முதலீட்டுக் காலத்தில் இவ்வளவு அதிக வட்டி விகிதத்தை வழங்கும் வேறு எந்த முதலீட்டுத் திட்டமும் தற்போது நாட்டில் இல்லை. தேவைப்பட்டால், ஒரு வருடத்திற்குப் பிறகு அபராதம் இல்லாமல் 40 சதவிகிதம் வரை முதலீட்டைத் திரும்பப் பெறலாம். நாட்டில் உள்ள எந்த வங்கியிலும் அல்லது தபால் அலுவலகத்திலும் உங்கள் மனைவி பெயரில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கைத் தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டுத் தொகை 2 லட்சம் ஆகும். இந்தத் தொகையை நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இங்கு உங்களுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். அதாவது 2 வருட முடிவில் உங்கள் கணக்கில் ரூ.2,32,044 இருக்கும். சாராம்சத்தில், உங்கள் 2 லட்சம் முதலீட்டின் வட்டி ரூ.32,044. அது நிச்சயம் பெறப்படும்.
பெண்களின் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும் என்பது ஒரே நிபந்தனை. நீங்கள் திருமணமாகதவராக இருந்தால், உங்கள் தாய் அல்லது சகோதரியின் பெயரிலோ கணக்கைத் திறக்கலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் மனைவியைத் தவிர உங்கள் மகள், தாய் மற்றும் சகோதரிகளின் பெயரிலும் முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications