2023-24ஆம் நிதியாண்டு வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் , வரி சேமிப்புக்கான வழிமுறைகள் என்ன, ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்ப பெறுவது எப்படி என்பது குறித்தும், அதற்கான வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
மருத்துவ காப்பீடு: மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் எளிதாக வருமான வரி விலக்கு பெற முடியும். மருத்துவ காப்பீட்டுக்கு நீங்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகையை சுட்டிக்காட்டி வரி விலக்கு பெற முடியும் . 80டி பிரிவில் இதற்கு வழி உண்டு.

இது தவிர ஆயுள் காப்பீட்டிற்கும் பிரிவு 80சி- இன் கீழ் உங்களால் வரிச் சலுகை பெற முடியும். வயதான பெற்றோர் இருக்கிறார்கள் ,அவர்களின் மருத்துவ காப்பிட்டுக் கொள்கையை நீங்கள் தான் பார்த்துக் கொள்கிறீர்கள் என்றால் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80டியின் கீழ் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வரிச்சலுகையையும் பெற முடியும்.
பொது வருங்கால வைப்பு நிதி: பொது வருங்கால வைப்பு நிதி மற்றொரு சிறந்த முதலீட்டு விருப்பம் ஆகும். நீண்ட கால இலக்குகளுக்காக இதில் முதலீடு செய்யலாம். குறிப்பாக ஓய்வூதியத்தை கருத்தில் கொண்டும் முதலீடு செய்ய வேண்டும் . இதில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்: என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் அரசே வழங்கக்கூடிய ஒரு திட்டமாகும். இதில் முதலீடு செய்து முறையான சேமிப்பை மேற்கொண்டு நீண்ட கால நன்மைகளை பெற முடியும் . வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சிசிபி இன் கீழ் ஒருவர் கூடுதலாக 50,000 ரூபாய் வரை வரிச்சலுகைகளை கோர முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்: சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டமாகும். பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். சுகன்யா யோஜனாவுக்குச் செய்யப்படும் பங்களிப்புகள் வரி விலக்குகளுக்குத் தகுதி பெறுகின்றன. 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். கூடுதலாக, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரிவிலக்கு உண்டு.
நிலையானவைப்புத் தொகை: நிலையான வைப்புத் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு சீரான வட்டி கிடைக்கும் வகையில் செய்யப்படும் டெபாசிட்டுகள் ஆகும். சிறிய தொகையில் இருந்து கூட முதலீடு செய்ய தொடங்கலாம் . முதலீடு செய்யப்பட்ட தொகை, சம்பாதித்த வட்டி, முதிர்வு தொகை ஆகியவற்றுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி இன் கீழ் பலன்களை பெற முடியும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்: தேசிய சேமிப்பு சான்றிதழ் , பாதுகாப்பான மற்றும் வரி சேமிப்புக்கு உதவும் ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். ஐந்து ஆண்டு கால முதிர்வு என்ற வகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ்களில் முதலீடு செய்யலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி-இன் கீழ் வரிகளை சேமிக்கலாம் . தேசிய சேமிப்பு சான்றிதழில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம்.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications