Minor Portfolio: உங்க குழந்தைகளின் எதிர்காலத்தை செல்வசெழிப்புடன் மாற்றும் ஒரு வாய்ப்பு..!

இந்தியாவில், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எல்ஐசி என்ற ஒரு திட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு மக்கள் தங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து வருவார்கள். ஆனால் இன்று சந்தையில் பல திட்டங்கள் உள்ளது. இதற்கு ஏற்றார் போல் மக்களுக்கு முதலீட்டு திட்டங்கள் உக்திகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக கிடைக்கிறது.

இந்த நிலையிஸல் தற்போது சந்தையில் புதியாக டிரெண்டாகி வரும் விஷயம் என்றால் அது , மைனர் ஃபோலியோ எனப்படும் சிறுவர் முதலீட்டு கணக்குகள் தான். இத்திட்டம் குறித்து எடெல்விஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாக இயக்குநரின் சில முக்கியமான விளக்கமும் கொடுத்துள்ளார்.

Minor Portfolio: உங்க குழந்தைகளின் எதிர்காலத்தை செல்வசெழிப்புடன் மாற்றும் ஒரு வாய்ப்பு..!

மைனர் ஃபோலியோ என்றால் என்ன?

மைனர் ஃபோலியோ என்பது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பெயரில் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ துவங்கி, நிர்வகிக்கும் முதலீட்டு கணக்கு ஆகும். பொதுவாக, இது மியூச்சுவல் ஃபண்ட் செய்யப்படும் முதலீடாக இருக்கும். அந்த குழந்தை 18 வயதை அடையும் வரை, பாதுகாவலர் அந்தக் கணக்கை நிர்வகிப்பார். இக்கணக்கில் இதர பல சிறப்புகள்..

தனி உரிமையாளர்: மைனர் ஃபோலியோ எப்போதும் சிறுவர் பெயரில் மட்டுமே இருக்கும். பாதுகாவலர் அல்லது பெற்றோர் பிரதிநிதியாக செயல்படுவார். சிறுவருடன் இணைந்து கூட்டாக கணக்கு திறக்க முடியாது.

பாதுகாவலரின் பங்கு: சிறுவர் 18 வயதை அடையும் வரை, முதலீடுகளை மேற்கொள்வது, கணக்கை நிர்வகிப்பது உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் பாதுகாவலருக்கே உண்டு.

வழக்கமான கணக்காக மாற்றம்: சிறுவர் 18 வயதை அடைந்ததும், மைனர் ஃபோலியோ வழக்கமான தனிநபர் கணக்காக மாற்றப்படும். அதன் பிறகு, அந்த இளைஞரே தனது முதலீடுகளை நேரடியாக நிர்வகிக்கலாம்.

எடெல்விஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாக இயக்குநரின் விளக்கம்

சமீபத்தில், எடெல்விஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ராதிகா குப்தா, மைனர் ஃபோலியோ குறித்து ட்விட்டரில் சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

1. சிறுவருக்கு பான் கார்டு இல்லாவிட்டால், மைனர் ஃபோலியோவை உருவாக்க முடியுமா?

பதில்: முடியும். மைனர் ஃபோலியோவை உருவாக்க சிறுவரின் பான் கார்டு கட்டாயமில்லை. பாதுகாவலரின் பான் கார்டு மட்டும் இருந்தால் போதும்.

2. மைனர் ஃபோலியோவை உருவாக்க என்ன ஆவணங்கள் தேவை?

பதில்: பாதுகாவலரின் பான் கார்டு, சிறுவருடனான உறவை நிரூபிக்கும் ஆவணங்கள் (பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆவணம்) தேவை. சிறுவரின் பான் கார்டு கட்டாயமில்லை.

3. பாதுகாவலர் மற்றும் சிறுவரின் வங்கி கணக்கிலிருந்து SIP (Systematic Investment Plan) செலுத்த முடியுமா?

பதில்: முடியும். SIP சந்தா மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பாதுகாவலர் மற்றும் சிறுவரின் வங்கி கணக்குகளைப் பயன்படுத்தலாம். ஆனால், பணம் எடுக்கும்போது, அது சிறுவரின் வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும்.

4. மைனர் ஃபோலியோவை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும்?

பதில்: சிறுவர்/பாதுகாவலர் உறவு ஆவணத்தின் சரிபார்ப்புக்கு உட்பட்டு, மைனர் ஃபோலியோவை உருவாக்க 2 வேலை நாட்களுக்குள் ஆகும். ஃபோலியோ உருவாக்கும்போது அல்லது அதற்குப் பிறகும் முதல் பரிவர்த்தனையைத் தொடங்கலாம்.

5. சந்தேகங்களுக்கு எங்கு தொடர்பு கொள்வது?

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழ்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்:

  • மின்னஞ்சல்: [email protected]
  • கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-425-0090
  • கட்டணம் வசூலிக்கப்படும் தொலைபேசி எண்: +91-40-23001181

சிறுவர்களின் எதிர்காலத்திற்கான முதலீடுகளைத் திட்டமிடும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு, மைனர் ஃபோலியோ ஒரு பயனுள்ள வழியாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+