சென்னை: இந்தியாவில், பங்குச்சந்தை தொடர்பான ஒரு தவறான கருத்து மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை நிபுணரும், முன்னாள் ஐஐடி பேராசிரியருமான பட்டாபிராமன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய குடும்பங்களில் சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான ஒரு தவறான கருத்து வேரூன்றி வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அண்மையில் பைனான்சியலி ஃப்ரீ என்ற பாட்கேஸ்ட் ஒன்றில் பேசிய பட்டாபிராமன், பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடுகள் அதிக லாபம் தரும் என்ற தவறான கருத்து மக்கள் மனதில் விதைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பங்குச்சந்தை வளர்ச்சி பாதையில் மட்டுமே இருக்கும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மனதில் இருக்கிறது.

பங்குச்சந்தை வீழ்ச்சி பற்றியோ அல்லது மெதுவான வளர்ச்சியை பற்றியோ யாரும் நினைத்துப் பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வுகளுக்கு பெயர் போனவர் தான் பட்டாபிராமன். இவர், அதிகபட்சமான தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் சிறந்த லாபம் பெறலாம் என நம்புவது ஏமாற்றத்தையே வழங்கும் என எச்சரித்துள்ளார்.
ஒரு சராசரி முதலீட்டாளர் தன்னுடைய மொத்த சேமிப்பில் 50 முதல் 60 சதவீத முதலீடு மட்டுமே ஈக்விட்டி சந்தையில் இருந்தால் போதும் என கூறியுள்ள அவர் நிலையான வருமான கருவிகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது உதவும் வகையில் மற்ற முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அனைவருமே தங்களுடைய முதலீடுகளை பன்முகப்படுத்திக் கொண்டால் ஒரு முதலீடு சரிவடையும்போது ஏற்படும் சிக்கல்களில் இருந்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய பங்குச்சந்தை வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது இந்த சூழலில் அனைவரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் காண்கின்றனர், ஆனால் பங்குச்சந்தை சரிவினை அடையும்போது அது கடுமையான மன உளைச்சலையும் எதிர்மறையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதற்கும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
முன்னதாக மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், அண்மையில் வெளியிட்ட ஒரு ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கின்றனர் எனக் கூறுகிறது.
அதாவது 2023 ஆம் ஆண்டு household financial assets மதிப்பு 11.1 சதவீதமாக இருந்து தற்போது 28 சதவீதம் என அதிகரித்துள்ளது. அதாவது இவர்கள் அனைவரும் பெரும்பாலான முதலீடுகளை பங்குச் சந்தைகளிலேயே முதலீடு செய்துள்ளனர்.
தற்போது பங்குச்சந்தை வளர்ச்சி பாதையில் இருக்கிறது இதில் முதலீடு செய்பவர்கள் சிறந்த செல்வ வளத்தை உருவாக்குகிறார்கள் என்பது பாசிட்டிவாக இருந்தாலும் இந்த அபரிவிதமான வளர்ச்சி என்பது நீடிக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications