2025-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வீட்டு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வரிச் சலுகையை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதாவது சுய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் 2 வீடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த முக்கிய அறிவிப்பு வீடு வாங்குவோரின் நிதிச் சுமையை குறைத்துள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், "தற்போது வரி செலுத்திக் கொண்டிருப்பவர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் தங்கள் பயன்பாட்டுக்கு வாங்கக்கூடிய சொத்துகளுக்கு வரி விலக்கு கோர முடியும். வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு எந்த நிபந்தனையும் இல்லாமல் இரண்டு வீடுகள் வரை வாங்கிக் கொள்ளலாம்", என்று கூறினார். இந்த நடவடிக்கைக்கு வரி செலுத்துவோர் மத்தியில் ஆதரவு குவியத் தொடங்கியுள்ளது.

சார்ட்டட் அக்கவுண்டண்ட் மற்றும் நிதி கல்வியாளரான சக்சி ஜெயின், "2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு வீடு வாங்குவதை மிகவும் மலிவு விலையில் பெறக்கூடியதாக மாற்றியுள்ளது", என்று கூறியுள்ளார்.
முன்பு, ஒரு வீட்டிற்கு மட்டுமே வரி நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது இரண்டு வீடுகளுக்கு இந்தச் சலுகை கிடைக்கிறது. அதாவது, ஒரு நபர் இரண்டு வீடுகளில் வசித்து வந்தால், இரண்டு வீடுகளுக்கும் வரிச் சலுகை பெறலாம்.
ஒரு உரிமையாளர் இரண்டு வீடுகளை வைத்திருந்தார் என்றால் இரண்டு வீடுகளையும் பயன்படுத்தினாலும் மற்றொரு வீடு வீட்டிற்கு வாடகை வருமானம் வருவதாக கணக்கிடப்பட்டு அதற்கு வரி விதிக்கப்பட்டது. இது வேலை மற்றும் தனிப்பட்ட காரணமாக குடிப்பெயர்ந்த உரிமையாளர்களுக்கு பெரும் சிக்கலாக அமைந்தது.
உதாரணமாக ஒரு நகரத்தில் ஒருவர் வேலை செய்து கொண்டிருப்பார். மற்றொரு நகரத்தில் அவருடைய குடும்பம் வசிக்கும். எனவே இரண்டு வீடுகளும் வைத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. அப்படி இருந்தும் அதற்கு வரி செலுத்தி வந்தனர். தற்போது கிடைத்திருக்கும் இந்த வரி சலுகை நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அதோடு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவித்து வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும் இது அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications