எஸ்ஐபி என்பது செல்வத்தை உருவாக்க நிரூபிக்கப்பட்ட வழிகளில் ஒன்றாகும். இது ஒரு வழக்கமான அடிப்படையில் நிலையான இடைவெளியில் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செய்யப்படும் முதலீடு ஆகும். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இந்த முறை பொருத்தமானது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் செல்வமும் பெருகும். பல மியூச்சுவல் ஃபண்டுகள் பல ஆண்டுகளாக மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளன. இது போன்ற சிறிய எஸ்ஐபிகள் முதலீடுகள் கூட பெரிய தொகைகளாக தற்போது மாறிவிட்டன.
அப்படிப்பட்ட நல்ல பலன்களைக் கொடுத்த மூன்று மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரங்கள் இதோ. இந்த திட்டங்கள் ஒரு மிகச் சிறிய மாதாந்திர எஸ்ஐபி ஆனது காலப்போக்கில் கோடிகளாக மாறியுள்ளது. அந்த வகையில், இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை இந்த மூன்று ஃபண்டுகளின் முதல் 2 ஹோல்டிங்குகளில் உள்ளன.

சிறந்த வருமானத்தைக் கொடுத்த ஃபண்ட்: மூன்று துறை சார்ந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு சூப்பர் ரிட்டர்ன்களை வழங்கியுள்ளன. இவை கடந்த ஓராண்டில் 32-40.70% லாபத்தைக் கொடுத்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இதே ஃபண்டுகள் 19.83% வரை லாபத்தை கொடுத்துள்ளன. ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் டெக்னாலஜி ஃபண்ட், ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் மற்றும் பிராங்க்ளின் இந்தியா டெக்னாலஜி ஃபண்ட் ஆகியவை ஆகும்.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் டெக்னாலஜி ஃபண்ட்: இந்த ஃபண்ட் மார்ச் 2000 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, 24 ஆண்டுகளில், ரூ.3,000 மாத எஸ்ஐபி ரூ.1,66,67,361 ஆக மாறியுள்ளது. மொத்த முதலீடு ரூ.8,64,000 கிட்டத்தட்ட இருமடங்காகிவிட்டது. இந்த ஃபண்ட் 20.42% வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது.
ஆதித்ய பிர்லா சன்லைஃப் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட்: இந்த ஃபண்ட் ஜனவரி 2000 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, 24 ஆண்டுகளாக எஸ்ஐபியில் மாதம் ரூ.3,000 முதலீடு செய்த ஒருவர் மொத்தம் ரூ.8,64,000 முதலீடு செய்துள்ளார். இந்த தொகை ரூ.1,16,01,603 ஆக உயர்ந்தது. இது 18.11% வருடாந்திர வருமானமாகும்.
பிராங்க்ளின் இந்தியா டெக்னாலஜி ஃபண்ட்: இந்த ஃபண்ட் ஆகஸ்ட் 1998 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, 26 ஆண்டுகளில், ரூ.3,000 மாத எஸ்ஐபி ரூ.1,11,01,006 ஆக மாறியுள்ளது. இந்த வகையில் மொத்தம் ரூ.8,64,000 முதலீடு அதிகரித்துள்ளது. இந்த ஃபண்ட் 17.82% வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications