மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய வருமான வரி மசோதா (Income Tax Amendment Bill 2025) -வை இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா, வீட்டு சொத்து வரி விதிகள் (House Property Tax Rules) மற்றும் மூலதன ஆதாய வரிவிதிப்பு (Capital Gains Tax) குறித்து சில முக்கிய திருத்தங்களை கொண்டுள்ளது.இந்த புதிய மசோதா வீட்டு சொத்து உரிமையாளர்கள், வாடகை வருமானம் பெறுபவர்கள், வீட்டுக் கடன் எடுத்தவர்கள், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோரின் வரிச்சுமையை குறைக்கும் வகையில் மாற்றங்களை கொண்டுள்ளது.
வீட்டு சொத்து வருமான கணக்கீட்டில் புதிய விதிகள்: வீட்டு சொத்தின் வருடாந்திர மதிப்பு கணக்கீடு மாற்றம் ஒரு சொத்தின் ஆண்டு மதிப்பு (Annual Value) கணக்கிடும் முறை மாறியிருக்கிறது.வாடகைக்கு விடப்பட்ட சொத்துகளுக்கு (Rented Property),நியாயமாக எதிர்பார்க்கப்படும் வாடகை (Fair Rental Value)உண்மையில் பெறப்பட்ட வாடகை (Actual Rent Received)இவைகளில் எது அதிகமோ, அதன்படி வரி விதிக்கப்படும். காலியாக உள்ள வீடுகளுக்கு வரிச்சுமை குறைவு கடந்த முறைச்சட்டப்படி, வீடு காலியாக இருந்தாலும் நியாயமான எதிர்பார்க்கப்பட்ட வாடகை அடிப்படையில் வரி விதிக்கப்பட்டது.

புதிய மசோதாவில், காலியாக உள்ள சொத்தின் ஆண்டுக் கணக்கீடு, பயன்படுத்தப்பட்ட காலத்தில் பெறப்பட்ட உண்மையான வாடகையின் அடிப்படையில் செய்யப்படும்.வீட்டு சொத்து வரிக்கு 30% நிலையான கழிவு (Standard Deduction) தொடரும். புதிய மசோதாவில், வீட்டு சொத்து வருமானத்திலிருந்து 30% நிலையான கழிவு (Standard Deduction) வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டு உரிமையாளர்கள் பராமரிப்பு செலவுகளுக்காக இந்த விலக்கைப் பெறலாம்.வீட்டுக் கடன் வட்டி கழிவுக்கு புதிய வரம்பு முந்தைய வரி விதிப்பு சட்டப்படி, வீட்டுக் கடன் வட்டி முழுமையாக கழிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய மசோதா, சுயஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளுக்கு (Self-Occupied Property) வட்டி விலக்குக்கு ரூபாய் 2 லட்சம் வரை மட்டுமே வரம்பு விதிக்கிறது.
புதிய விதிகள்:வாடகைக்கு விடப்பட்ட வீடுகளுக்கு - வட்டி கழிப்புக்கு எந்த விதமான வரம்பும் இல்லை.கட்டுமானம் முடிவதற்கு முன்பு செலுத்திய வட்டி, 5 ஆண்டுகளுக்கு சமமாக பிரித்து கழிக்கலாம்.கூட்டு சொத்து உரிமையாளர்களுக்கு புதிய வரிவிதிப்பு முறை ஒரு சொத்துக்கு பல உரிமையாளர்கள் இருந்தால், புதிய விதிகள் கீழே உள்ள விதமாக மாற்றம் கொண்டுள்ளன. நிலுவையில் உள்ள வாடகை மீதான வரி விதிப்பு கடந்த வரி சட்டப்படி, வாடகை செலுத்தாத நிலை இருந்தால், அதை வரி கணக்கில் கழிக்கலாம். ஆனால், புதிய விதிகள் கீழ், நிலுவை வாடகை (Unrealized Rent) வரைசேர்ந்த ஆண்டிலேயே வரி விதிக்கப்படும்.
டெவலப்பர்களுக்கான புதிய நிவாரணம் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு (Real Estate Developers) விற்பனை செய்யப்படாத குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறைவு சான்றிதழ் (Completion Certificate) கிடைத்த நாளிலிருந்து 2 ஆண்டுகள் வரை சொத்தின் மதிப்பு பூஜ்ஜியமாகக் கருதப்படும்.
இதன் மூலம், டெவலப்பர்கள் மீது வரிசுமை குறையும்.வீட்டு சொத்திலிருந்து வருமான இழப்புக்கு புதிய விதிகள் வீட்டு சொத்து வருமானத்தில் இழப்பு ஏற்பட்டால், அதை செட்-ஆஃப் (set off) மற்றும் கேரி ஃபார்வர்டு (carry forward) செய்ய புதிய வரம்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவர் கூறப்படுகின்ற முக்கிய விதிகளாக ,விற்பனை செய்யப்பட்ட சொத்து மீதான வரி விலக்கு பெற,2 ஆண்டுகளுக்குள் புதிய சொத்து வாங்க வேண்டும் 3 ஆண்டுகளுக்குள் கட்ட வேண்டும் என்றும் மறு முதலீடு செய்யப்பட்ட சொத்து 3 ஆண்டுகளுக்குள் விற்கப்பட்டால்,முன்பு அளிக்கப்பட்ட வரி விலக்கு நீக்கப்படும் என்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரியாக கணக்கிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
2025 புதிய வருமான வரி மசோதா, வீட்டு சொத்து உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சியாளர்களுக்கு சில முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. வாடகை வருமானம், வீட்டு கடன் வட்டி விலக்கு, மூலதன ஆதாய வரி, காலியாக உள்ள வீடுகளுக்கான விதிகள் போன்றவை புதிய விதிகளின் மூலம் மாற்றப்பட்டுள்ளன.இந்த மாற்றங்கள் வரி சமநிலையை ஏற்படுத்தவும், தவிர்ப்பு முறைகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. வீட்டு சொத்துக்கு தொடர்பான புதிய விதிகளை அனைவரும் புரிந்துகொண்டு, தங்களது வரி திட்டங்களை சரியாகப் பரிசீலிக்க வேண்டும்.
இதனால், வீட்டுச் சொத்து முதலீட்டாளர்கள் சரியான திட்டமிடல் மற்றும் நிதி ஆலோசனை மூலம் தங்கள் முதலீடுகளை திட்டமிடுவது மிகவும் முக்கியம். புதிய விதிகள் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதால், அனைவரும் அவற்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications