இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டில் நிதிச் சேவைகளைப் பெறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி சேவைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கிரெடிட் கார்டுகள் இன்று பலருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. சம்பளம் பெறும் நபர்களுக்கு மட்டும்தான் கிரெடிட் கார்டுகள் சாத்தியம் என்ற நிலைமை மாறி பே ஸ்லிப் இல்லாதவர்களுக்கும் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்க தொடங்கிவிட்டன.
இல்லத்தரசிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் கிரெடிட் கார்டு பெறலாம். பே ஸ்லிப் இல்லாமல் கிரெடிட் கார்டு பெறுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளது? என்பது குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.

பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக பெரும் கிரெடிட் கார்டுகள்: எப்படி பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக கடன் பெறுகிறோமோ? அதேபோல உங்கள் பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக கிரெடிட் கார்டு பெற முடியும். அப்படி வாங்கினால் நீங்கள் டெபாசிட் செய்த தொகை வங்கியில் பிணையமாக கருதப்படும். ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற முன்னணி வங்கிகளில் இது போன்ற கிரெடிட் கார்டுகள் கிடைக்கும். நீங்கள் டெபாசிட் செய்த FD தொகையில் 75 சதவீதம் முதல் 90 சதவீத வரம்பில் கிரெடிட் கார்டு பெறலாம்.
கூடுதல் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: கிரெடிட் கார்டு பெறுவதற்கான மற்றொரு முறை உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கிரெடிட் கார்டை வைத்து கூடுதல் கிரெடிட் கார்டை பெறுவது. அதாவது ஏற்கனவே உங்கள் குடும்ப உறுப்பினர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வந்தால் அவருடைய கணக்குடன் இணைக்கப்பட்டு இன்னொரு கிரெடிட் கார்டு பெறலாம். HDFC பேங்க், ஆக்சிஸ் பேங்க், கோடக் மகேந்திரா பேங்க் போன்ற பேங்க்-களில் இந்த வசதி வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கான கிரெடிட் கார்டுகள்: கல்லூரி மாணவர்களின் செலவை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் இந்த கிரெடிட் கார்டுகள். இவற்றை வாங்குவதற்கு எந்த ஒரு பே ஸ்லிப்பும் தேவையில்லை. ஆனால் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடுமையான விதிமுறைகள் இதற்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். பொதுவாகவே கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. இவை 26 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை இருக்கலாம்.
மற்ற வருமானச் சான்றுகளை சமர்ப்பிக்கலாம்: நீங்கள் சுய தொழில் செய்பவராக இருந்தாலோ அல்லது ஃப்ரீலான்சராக பணிபுரிந்து வந்தாலோ, உங்கள் கடன் தகுதியை தீர்மானிக்க பே ஸ்லிப் அல்லாமல் வேறு வங்கி அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம். படிவம் 16 போன்ற வருமான வரி ஆவணங்களையும் வங்கிகள் ஏற்றுக் கொள்கின்றன. வாடகை வருமானம் அல்லது ஃப்ரீலான்சர் வேலை போன்ற ஆதாரங்களில் இருந்து உங்களுக்கு பணம் வந்து கொண்டிருந்தால் அதையே ஆவணமாக வைத்து கிரெடிட் கார்டு பெற முடியும்.
இணை விண்ணப்பதாரருடன் கிரெடிட் கார்டு பெறுவது: உங்களிடம் பே சிலிப் இல்லை என்றாலும் உங்களுக்காக இணை கையொப்பமிட வேறு யாரேனும் இருந்தால் அதை வைத்தும் நீங்கள் கிரெடிட் கார்ட் பெற முடியும். ஆனால் உங்களுக்காக கையெழுத்து போடும் நபர் நிலையான வருமானம் கொண்டவராக இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டு கடன் வாங்க எப்படி கேரன்டி கையெழுத்து கேட்கப்படுகிறதோ? அதேபோல கிரெடிட் கார்டுக்கும் கேட்க்கப்படும். இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் கிரெடிட் கார்டு பெறலாம்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications