தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான ஈபிஎஃப்ஓ தான் இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பிஎஃப் கணக்கை மேலாண்மை செய்து வருகிறது. நம்முடைய பிஎஃப் கணக்கு செயல்படும் முறை, பிஎஃப் கணக்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னரே பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் முறை உள்ளிட்டவற்றில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது .
ஈபிஎஃப்ஓ அமைப்பின் வாரிய குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து பிஎஃப் சந்தாதாரர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இதன்படி பிஎஃப் உறுப்பினர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் 100% தொகையையும் ஓய்வுகாலத்திற்கு முன்னரே பெற முடியும். இது தவிர முக்கியமான சில விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன .

பிஎஃப் கணக்கில் மாதந்தோறும் ஊழியர் சார்பாகவும் நிறுவனம் சார்பாகவும் பணம் வரவு வைக்கப்படுவதே அந்த ஊழியரின் ஓய்வுகாலத்தை கருத்தில் கொண்டு தான். இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் நம் பிஎஃப் கணக்கில் இருந்து பகுதி அளவு பணத்தை நாம் எடுத்து கொள்ள முடியும். ஆனால் அதற்கென வரம்பு உள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 25% தொகையை விடுத்து மீதமுள்ள 75% தொகையை ஓய்வுகாலத்துக்கு முன்பே எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஓய்வுபெற்ற பிறகு தான் இந்த பணத்தை எடுக்க முடியும் என இருந்தது.
இதற்கு முன்பு நீங்கள் வேலையை விட்டு நின்ற பிறகு உங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் முழு பணத்தையும் எடுத்துக் கொள்வதற்கான கால வரம்பு இரண்டு மாதங்களாக இருந்த தற்போது 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 மாதங்கள் தொடர்ச்சியாக நீங்கள் வேலையே இல்லாமல் இருந்தால் தான் உங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியும்.
அதேபோல ஈபிஎஸ் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் வேலையே இல்லாமல் 36 மாதங்கள் இருந்திருக்க வேண்டும் என விதிமுறைகள் மாற்றப்பட்டிருக்கின்றன . மேலும் பணத்தை திரும்ப பெறுவதற்கான 13 வகையான காரணங்கள் வெறும் மூன்றாக சுருக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நம் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் முறை என்பது எளிமையாகி உள்ளது.

அதாவது இதுவரை நாம் பிஎஃப் கணக்கில் இருந்து பகுதி அளவு பணத்தை எடுக்கிறோம் என்றால் அதற்கான காரணங்களை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து ஏற்கலாமா நிராகரிக்கலாமா என முடிவு செய்வார்கள். இனி அப்படி எந்த ஒரு காரணமும் குறிப்பிடாமலே நம் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை கோரலாம்.
எனவே ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் , காரணத்தை விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாஸ்புக் லைட் , முக அங்கீகார அடையாள அடிப்படையில் பிஎஃப் கணக்கு மாற்றம் என பல்வேறு டிஜிட்டல் முறையிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன . உங்களுடைய UAN எண் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருக்கிறது எனும் போது நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறினால் தானாகவே உங்களுடைய பிஎஃப் கணக்கு டிரான்ஸ்பர் செய்யப்படும் .
மேலும் பிஎஃப் கணக்கில் இருந்து ஒரு பகுதி அளவு பணத்தை எடுக்க வேண்டுமென்றால் குறைந்தது 12 மாதங்களாவது வேலை செய்திருக்க வேண்டும் என அதற்கான வரம்பு குறைக்கப்பட்டு இருக்கிறது. ஓய்வூதிய பெறக்கூடிய நபர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் என்பது ஈபிஎஃப்ஓ மூலம் வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications