ஜனவரி 1 முதல் இந்த சலுகை இல்லை.. NPS முதலீட்டாளர்களே உஷார்..!

கொரோனா தொற்றுநோய் காலத்தில் மக்களின் நிதி நெருக்கடியை போக்க ஜனவரி 2021 இல் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம், NPS சந்தாதாரர்களை self-declaration முறையின் கீழ் ஆன்லைன் வாயிலாகவே ஒரு பகுதி தொகையை திரும்பப் பெறுவதற்கு அனுமதித்தது.

இப்போது தொற்றுநோய் தொடர்பான பாதிப்புகள் இல்லாத நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் NPS திட்ட முதலீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியை அரசு ஊழியர்கள் சந்தாதாரர்களுக்கு இனி கிடைக்காது என்று ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் PFRDA கூறியுள்ளது.

அரசு ஊழியர்கள் பிரிவில் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகள்.

NPS திட்டம்

NPS திட்டம்

ஜனவரி 2021 இல் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையமான PFRDA வெளியிட்ட அறிக்கையில் NPS திட்டத்தின் கீழ் சிறு பகுதியளவு தொகையை திரும்பப் பெறுதல்களை அனுமதித்தது. இது கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இது பெரிய அளவில் பயன் அளித்து வந்தது.

வித்டிரா

வித்டிரா

 

NPS திட்டத்தின் சந்தாதாரர்களின் நலனுக்காக self-declaration முறையின் மூலம் கோவிட் தொற்றுநோயை சமாளிக்க ஒரு சிறப்பு விநியோகமாக இந்த partial withdrawal சேவையை உருவாக்கியது.

கோரிக்கை

கோரிக்கை

மேலும் இந்த கோரிக்கைகளை ஏற்கவும், சரிபார்க்கவும், அங்கீகாரக்கவும், நோடல் அதிகாரிகளின் சுமையை குறைக்க ஆன்லைன் கோரிக்கைகள் CRA அமைப்பில் உடனடி வங்கிக் கணக்கு சரிபார்ப்புக்குப் பிறகு, தொடர்புடைய நோடல் அதிகாரிகள் / POPகளின் அங்கீகாரம் தேவையில்லாமல், பென்னி டிராப் மூலம் நேரடியாகச் செயல்படுத்தப்பட்டது.

2023 ஜனவரி 1

2023 ஜனவரி 1

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் NPS திட்ட முதலீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியை அரசு ஊழியர்கள் சந்தாதாரர்களுக்கு இனி கிடைக்காது என்பதால் இந்த சலுகையை பயன்படுத்துவோர் கீழே உள்ளதை கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும்

கண்டிஷன்கள்

கண்டிஷன்கள்

1) சந்தாதாரர் குறைந்தது மூன்று வருடங்களாவது NPS திட்டத்தில் முதலீடு செய்திருக்க வேண்டும்

2) NPS சந்தாதாரர் செய்த பங்களிப்புகளில் 25 சதவீதத்திற்கு மேல் திரும்பப் பெறுதல் தொகை இருக்கக்கூடாது
3) NPS சந்தாவின் முழு காலத்திலும் PFRDA அமைப்பு அதிகபட்சமாக 3 பகுதியை திரும்பப் பெற அனுமதிக்கிறது.
4) குறிப்பிட்ட காரணங்களுக்கு எதிராக மட்டுமே பணத்தை திரும்பப் பெற முடியும். எடுத்துக்காட்டாக;
a) குழந்தைகளின் உயர் கல்வி
b) குழந்தைகளின் திருமணம்
c) ஒரு குடியிருப்பு வீட்டை வாங்குவதற்கு/கட்டமைப்பதற்காக (குறிப்பிட்ட நிபந்தனைகளில்)
ஈ) தீவிர நோய்களுக்கான சிகிச்சைக்காக

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+