ஓய்வூதிய காலத்துக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தில் எதற்கு கெடுபிடி என யோசித்துக் கொண்டிருந்த, NPS சந்தாதாரர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து உள்ளவர்களுக்காக, அதன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA வெளியேறும் விதிகளில், புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் என்.பி.எஸ் சந்தாதாரர்கள் இனி 80% வரையிலான கார்ப்பஸ் தொகையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையால் உங்கள் கையில் எவ்வளவு பணம் கிடைக்கும், மற்ற முழு விவரங்கள் என்ன, வாருங்கள் பார்க்கலாம்.
மிகப்பெரிய மாற்றம்!
அரசு சாரா ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த தளர்வுகளானது மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். ஓய்வு பெறும்போது உங்கள் மொத்த சேமிப்பில் குறைந்தபட்சம் 40% தொகையாவது வருடாந்திர திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதியானது இருந்தது. ஆனால் இது தற்போது 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக எடுக்கும் தொகையானது 80% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் அதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். இல்லையேல் 60 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அல்லது வேலையில் இருந்து பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது பூர்த்தி செய்தால் மட்டுமே மேற்கண்ட 80% பணம் எடுக்கும் திட்டம் பொருந்தும்.
100% பணம் எடுக்கும் வசதி?
உங்கள் மொத்த சேமிப்பு தொகையானது 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், நீங்கள் வருடாந்திர திட்டத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. 100% தொகையையும் முழுமையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இதை மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக எஸ் டபிள்யூ பி போன்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு வேளை உங்கள் மொத்த ஓய்வூதிய சேமிப்பானது 8 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், சந்தாதாரர்கள் 6 லட்சம் ரூபாய் வரை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள தொகையை குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்கு முறையான தவணைகளாக அல்லது வருடாந்திர திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
முன்கூட்டியே வெளியேறினால்?
ஒரு என்.பி.எஸ் சந்தாதாரர் 15 ஆண்டுகள் முடிவதற்கு முன்பாகவே அல்லது 60 வயது ஆவதற்கு முன்பாகவோ வெளியேறினால் பழைய விதிகளே தொடரும். அதாவது மொத்த தொகையில் 80% தொகையை வருடாந்திர திட்டத்தின் மூலமாகவும், 20% தொகையை மொத்தமாகவும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை இதில் மொத்த சேமிப்பானது 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் மட்டுமே முழுத் தொகையும் எடுத்துக் கொள்ள முடியும்.
60- வயதுக்கு மேல் இணைந்தவர்களுக்கு விதிகள்?
60 வயதிற்கு மேல் என்.பி.எஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் சேமிப்பு 12 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருந்தால், முழுத் தொகையையும் எடுத்துக் கொள்ளலாம். 12 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 20% தொகையை வருடாந்திர திட்டத்திற்கும், 80% தொகையை மொத்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
85 வரை நீட்டிக்கலாமா?
அரசு சாரா ஊழியர்கள் தங்கள் பணத்தை எடுப்பதையோ அல்லது வருடாந்திர திட்டத்தில் பணம் பெறுவதையோ 85 வயது வரையில் தள்ளிப்போடலாம். ஆனால் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு வெளியேறும் வசதி உண்டு. இதில் அரசு ஊழியர்களுக்கான விதிகள் மாற்றம் செய்யப்படவில்லை. ஓய்வுக்குப் பிறகும் 85 வயது வரை என்.பி.எஸ் கணக்கைத் தொடரலாம். ஆனால் வெளியேறும் போது கட்டாயம் 40% தொகைக்கு வருடாந்திர திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். 60% தொகையை மட்டுமே மொத்தமாக எடுக்க முடியும்.
சுருக்கமாக சொன்னால் சாதாரண மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த 80% மொத்தமாக பணம் எடுக்கும் வசதி மற்றும் 8 லட்சம் ரூபாய் வரையிலான 100% பணம் எடுக்கும் வசதி மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?



Click it and Unblock the Notifications