என்.பி.எஸ் வாத்சல்யா vs குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. இதில் எது முதலீட்டுக்கு சிறந்தது?

ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தின் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறோம். அவர்களின் எதிர்காலம் குறித்தும் பல வழிகளில் யோசிப்பதும் உண்டு. அப்படி, அவர்களுக்கான நிதி எதிர்காலத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பலரது கேள்வியாக உள்ளது. குழந்தைகள் எதிர்காலத்திற்கான பல சேமிப்பு திட்டங்கள் நம் நாட்டில் உள்ளன. நமது மத்திய மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகின்றன. அந்தவகையில், சமீபத்தில் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். அதுதான் என்பிஎஸ் வாத்சால்யா.

என்பிஎஸ் வாத்சல்யா என்பது குழந்தைகள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். அதே சமயம் குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட்கள் நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டிற்குமான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.

என்.பி.எஸ் வாத்சல்யா vs குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. இதில் எது முதலீட்டுக்கு சிறந்தது?

என்பிஎஸ் வாத்சல்யாவின் கீழ், முதலீடு மற்றும் ஓய்வூதிய பங்களிப்புக்கு எளிதான வழி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டை ஆண்டு அடிப்படையில் ரூ 1,000 முதல் தொடங்கலாம். இதற்கு அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்தில் கூட்டு வட்டி கிடைக்கிறது. இது குழந்தைகளின் நிதி எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்கிறது. நாம், என்பிஎஸ் வாத்சல்யா மற்றும் குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இவற்றிற்கான வேறுபாடுகள் என்ன? அதற்கேற்ப எப்படி முதலீடு செய்யலாம் என்பதை காணலாம்.

முதலீடு வகை
என்பிஎஸ் வாத்சல்யா பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. அதே சமயம் குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் முக்கியமாக பங்குகள் மற்றும் கடனில் முதலீடு செய்கின்றன.

குறைந்தபட்ச முதலீட்டு தொகை
என்பிஎஸ் வாத்சல்யாவின் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000, குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.100 மட்டுமே.

திரும்பப் பெறுதல்
என்பிஎஸ் வாத்சல்யாவில், லாக்-இன் காலத்திற்குப் பிறகு 25% வரை பகுதியளவு திரும்பப் பெறலாம். அதே சமயம் சில்ட்ரன் மியூச்சுவல் ஃபண்டில் திரும்பப் பெறும் செயல்முறை நிதி வகையைப் பொறுத்து மாறுபடும்.

வரி சலுகை
என்பிஎஸ் வாத்சல்யா பிரிவு 80CCD(1B) இன் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. அதே சமயம் குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார். இது தவிர, இந்தத் திட்டத்தில் சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணையும் வழங்கினார். நிர்மலா சீதாராமன் இந்த திட்டத்தை நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டின் போது அறிவித்தார்.

இந்த திட்டம் தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இதன் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக நிதி சேகரிக்க முடியும், அதேசமயம் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு, அது இயல்பாகவே என்பிஎஸ் ஆக மாற்றப்படும்.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+