NPS திட்டத்தில் புதிய சலுகை.. அட இது நல்லா இருக்கே..!

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) சந்தாதாரர்கள் விரைவில் நிதி திரும்பப் பெறுவதற்கான புதிய வசதியை பெற உள்ளனர். ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டாளர் அமைப்பாண PFRDA முறையான திரும்பப் பெறும் திட்டத்தை அதாவது systematic withdrawal plan வெளியிட திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் குறித்த ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, அடுத்த காலாண்டின் இறுதிக்குள் நாங்கள் இத்திட்டத்தை கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன் என PFRDA தலைவர் தீபக் மொஹந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

NPS திட்டத்தில் புதிய சலுகை.. அட இது நல்லா இருக்கே..!

NPS சந்தாதாரர்கள் ஓய்வுக்குப் பிந்தைய காலம் முழுவதற்கும் annuity உடன் பிணைக்கப்படுவதற்குப் பதிலாக, எவ்வளவு, எப்போது தங்கள் இருப்பைத் வித்டிராவல் செய்ய விருப்பத்திற்கு ஏற்ப அனுமதிக்கும். இதன் மூலம் NPS தொகையை முக்கியமான தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள முடியம்.

தற்போது இருக்கும் சிஸ்டமேடிக் லம்ப்சம் வித்ட்ராவல் (SLW) சலுகை மூலம் 60 வயதை எட்டிய NPS சந்தாதாரர்கள், தாங்கள் முதலீடு செய்துள்ள முதலீட்டில் உருவாக்கப்பட்ட கார்பஸைத் தொகையை விருப்பத்திற்கு ஏற்ப திரும்பப் பெற அனுமதிக்கும்.

உதாரணமாக ஒய்வு பெற்றதில் இருந்து 75 வயது வரை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் ஒருவரின் விருபத்திற்கு ஏற்ப தொகையை திரும்பப் பெறலாம். இந்த நெகிழ்வுத்தன்மை NPS சந்தாதாரர்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை வழங்குகிறது. இதை விருப்பத்தின் படி எப்போது வேண்டுமோ அப்போது எடுத்துக்கொள்ளும் வசதி கொண்டுவரப்பட உள்ளதாக தெரிகிறது.

நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) கணக்கு மூலம் ஒய்வு பெற்ற பின்பு நிதி சுமையில்லாமல் ஓய்வூதியத்தின் மூலம் வாழ்வதற்கு ஏற்க திட்டம் மட்டும் அல்ல, மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வரியைச் சேமிக்கவும் முக்கியக் கருவியாக உள்ளது.

குறிப்பாக நீங்க 30 சதவீத வருமான வரிப் பிரிவில் இருந்தால் பெரும் தொகையை வருமான வரியில் இருந்து சேமிக்க முடியும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80CCD (1B) இன் கீழ், NPS சந்தாதாரர்களுக்கு ஒரு பிரத்தியேக வரிச் சலுகை கிடைக்கும்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டை உதாரணமாக 60:40 ஆகப் பங்குச்சந்தை கடன் சந்தையில் பிரித்து முதலீடு செய்யும் பட்சத்தில் கட்டாயம் 10 சதவீதம் வருடாந்திர லாபம் கிடைக்கும். இப்படியிருக்கையில் மாதம் 10000 ரூபாய் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒய்வு அடைந்த பின்பு lumpsum தொகையாக 1,36,75,952 ரூபாயும், தேர்வு செய்யப்பட்ட 40 சதவீதம் annunity தொகையை வைத்து மாதம் 45,587 ரூபாய் பென்ஷன் தொகை பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+