தேசிய சேமிப்பு பத்திரம்.. எப்படி வரியை மிச்சப்படுத்தலாம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate) நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும்.

தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பறந்த ஜெட் ஏர்வேஸ்.. விமான பயணிகள் மகிழ்ச்சி!3 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பறந்த ஜெட் ஏர்வேஸ்.. விமான பயணிகள் மகிழ்ச்சி!

குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை.

வரிச்சலுகை

வரிச்சலுகை

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையை வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 6.8% ஆகும். இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், 5 வருடம் கழித்து, உங்களது முதலீடு 1389.49 ரூபாயாக அதிகரிக்கும். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.

எவ்வளவு வரிச்சலுகை கிடைக்கும்?

எவ்வளவு வரிச்சலுகை கிடைக்கும்?

முதலீட்டாளார் ஒருவர் ஏப்ரல் 2021ல் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். 2021 - 2022ம் நிதியாண்டில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகையினை பெற முடியும். ஆனால் வரவிருக்கும் ஆண்டுகளில் வரி செலுத்த வேண்டுமா? முதிர்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகைக்கு நான் வரி செலுத்த வேண்டுமா? விவரம் என்ன? என கேட்டுள்ளார்.

 டிடிஎஸ் இல்லை

டிடிஎஸ் இல்லை

இது குறித்து நிபுணர்கள் அளித்த பதிலில், இந்த பத்திர முடிவில் திரட்டப்படும் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் இருக்காது. ஆனால் ஒருவரின் வருமான வரி வரம்பை பொறுத்து முதலீட்டின் மூலம் கிடைப்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். கிடைக்கப்பெரும் வட்டியை மறு முதலீடு செய்தும் வரி விலக்கு பெறலாம்.

என் எஸ் இ-யில் வரி நோக்கங்களுக்காக இரண்டு விருப்பங்கள் உண்டு. ஒன்று நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் உங்களது வருமான வட்டியை காட்டலாம். அல்லது முதிர்வுகாலத்தில் பெற்ற தொகையை காட்டலாம்.

 

வரிச் சலுகை எப்போதெல்லாம் கிடைக்கும்?

வரிச் சலுகை எப்போதெல்லாம் கிடைக்கும்?

என் எஸ் இ-யில் வட்டி மாதம் மாத கணக்கிடப்பட்டாலும் திட்ட முடிவிலேயே முதிர்வு தொகை கிடைக்கிறது. இதனால் கிடைக்கும் வட்டி வருமானமும் முதலீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஆக 80 சி பிரிவின் கீழ் வரிச்சலுகை பெற தகுதியுடையதாகவே பார்க்கப்படுகின்றது. ஆக நீங்கள் இந்த திட்டத்தில் முதிர்வு காலத்தில் பணம் கிடைக்கும், ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் வரிசலுகையை பெறலாம்.

 எது பெஸ்ட்

எது பெஸ்ட்

இதே முதிர்வு காலத்தின் போது கிடைக்கும் வட்டி வருமானத்தினை காட்டியும் வரி செலுத்தலாம். ஆனால் இது கூடுதல் சுமையாக இருக்கும். ஆக ஒவ்வொரு ஆண்டும் வரி கணக்கில் காட்டுவதே சரியான ஆப்சனாக இருக்கும் என கூறுகின்றனர். .

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NSC: how income tax on interest is calculated?

NSC: how income tax on interest is calculated?/தேசிய சேமிப்பு பத்திரம்.. எப்படி வரியை மிச்சப்படுத்தலாம்.. !
Story first published: Sunday, May 8, 2022, 18:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X