இன்சூரன்ஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி தான். அதில் பாலிசி எடுத்திருந்தாலும், எடுக்காவிட்டாலும் பலருக்கும் இது தெரிந்திருக்கும். அந்தளவுக்கு பலவகையான பாலிசிகளை கொண்டுள்ளது எல்ஐசி.
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு எண்ணம் இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழவேண்டும். அதாவது வயதான காலத்திலும் யாரையும் சாராமல், சொந்த கால்களில் நிற்க வேண்டும் என்பது தான்.
பென்ஷன் திட்டங்கள்
அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் கிடைக்கும் பென்ஷன் தொகையை வைத்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பர். இதே மற்றவர்களுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கு,. ஆனால் தனியார் ஊழியர்கள், பெண்கள், வயதானவர்கள் என பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனினும் சில பென்ஷன் திட்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் இது போன்ற பலனை பெற்று வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் முன்னணி மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யும் சில பென்ஷன் திட்டங்களை வழங்கி வருகின்றது.
சாரல் பென்ஷன் திட்டம்
அதில் நாம் இன்று பார்க்கவிருப்பது எல்ஐசி-யின் சாரல் பென்ஷன் திட்டத்தினை பற்றித் தான். இந்த பாலிசியின் சிறப்பம்சமே ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதும். பாலிசியினை தொடங்கும்போது ஆண்டுத்தொகை விகிதம் உத்தரவாதம் அளிக்கப்படும். இந்த பாலிசியினை எல்ஐசி அலுவலகத்திலோ அல்லது ஆன்லைனிலோ பெற்று கொள்ளலாம்.
வயது வரம்பு
இந்த பாலிசியினை 40 வயது முதல் 80 வயது வரையில் எடுத்துக் கொள்ளலாம். பாலிசிதாரர் இந்த திட்டத்தினை எடுக்கும்போது அதிக தொகையினை ஒரே பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பாலிசிதாரர் அவரின் வாழ் நாள் முழுவதும் ஒரு வருமானத்தினை பெறலாம். இதில் பங்கு சந்தை சார்ந்த ரிஸ்க் இல்லை. இதில் இருவகை திட்டம் உண்டு.
இருவகை திட்டம்
முதல் வகை தனி நபர் பாலிசி - 100% திரும்ப தரும் பிரீமியம். இரண்டாவது ஜாய்ண்ட் லைஃப் 100% திரும்ப தரும் பிரீமியம் என இருவகைகள் உண்டு. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12,000 ரூபாய் தொகையாவது செலுத்த வேண்டும். அதாவது மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் இல்லை. ஆண்டு ஆரையாண்டு, மாதாந்திர முறைகளில் தொகையை செலுத்தவும் வசதி உண்டு.
கடன் வசதி உண்டா?
இந்த பாலிசியினை பெற்ற ஆறு மாதத்திற்கு பிறகு கடன் பெறலாம். 6 மாதத்திற்கு பிறகு சரண்டர் செய்யலாம். பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்து விட்டால், நாமினி பிரீமியம் தொகையை பெறுவார்கள். இந்த பாலிசியில் முதிர்ச்சி பலன் என்பது கிடையாது. மொத்தத்தில் பாலியின் மூலம் மாத மாதம் வருமானம் கிடைக்கும் ஒரு திட்டமாக உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications