மத்திய அரசு தபால் நிலையங்கள் வழியாகவே பல்வேறு முதலீட்டு திட்டங்களை நமக்கு வழங்குகின்றன . தபால் நிலையங்களில் கிடைக்கக்கூடிய இந்த முதலீட்டு திட்டங்களுக்கு வங்கிகளில் கிடைக்கக்கூடிய ஃபிக்சட் டெபாசிட்களை விட அதிகமான வட்டி விகிதம் கிடைக்கின்றன.
தபால் நிலையங்களில் நாம் செய்யக்கூடிய முதலீட்டு தொகைக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும், நம்முடைய பணம் பாதுகாப்பாக இருக்கும். மக்கள் தங்கள் கைவசம் ஒரு கணிசமான பணம் இருக்கிறது. முதலுக்கு மோசம் போகாமல் அதனை ஓரிடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணினால் கண்டிப்பாக தபால் நிலையங்கள் வழங்கக்கூடிய முதலீட்டு திட்டங்களை நம்பி கண்ணை மூடிக்கொண்டு பணத்தை முதலீடு செய்யலாம்.

வங்கிகளை விட அதிக வட்டி வருமானம் கிடைக்கிறது, நம்முடைய பணத்திற்கும் பாதுகாப்பு இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய தபால் நிலையங்களில் மாதாந்திர வருமானம் வழங்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டம் தற்போது பலரிடமும் பிரபலமாகி வருகிறது. இதனை post office monthly income scheme என அழைக்கிறார்கள் . ஒரு கணிசமான தொகையை இதில் முதலீடு செய்து விட்டால் உங்களுக்கான வட்டி தொகை மாதம் தோறும் உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும் .
இது உங்களுக்கு மாதந்தோறும் ஒரு வருமானத்தை கொடுக்கும். நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த மாதாந்திர வருமான திட்டம் கிடைக்கிறது. இந்தியாவை சேர்ந்த குடிமகன்கள் அனைவருமே இந்த திட்டத்தில் முதலீடு செய்து மாதம் தோறும் வருமானம் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கிறது. வங்கிகள் கூட இந்த அளவிற்கு வட்டி வழங்குவதில்லை என்பதுதான் உண்மை.
18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கிவிட்டு இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். ஐந்தாண்டு காலம் இந்த திட்டத்தின் முதிர்வு காலமாக இருக்கும். இந்த ஐந்து ஆண்டுகளுக்கும் நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கு ஒரு ஆண்டுக்கான வட்டி என்பது கணக்கீடு செய்யப்பட்டு 12 மாதங்களுக்கும் பிரித்து உங்களுடைய தபால் நிலைய கணக்கில் மாதம் தோறும் வரவு வைக்கப்பட்டு விடும்.
மூன்று பெரியவர்கள் சேர்ந்து கூட ஜாயிண்ட் அக்கவுண்டாக இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு தனிநபர் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம் . இதுவே ஜாயிண்ட் அக்கவுண்டாக இருந்தால் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும் . மாதம் தோறும் வட்டி நம்முடைய கணக்கிற்கு வரவாக வந்து கொண்டே இருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் 7.4% கீழ் பார்க்கும்போது உங்களுக்கு மாதம் தோறும் சராசரியாக 3,083 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இதுவே 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 5,500 ரூபாய் மாதாந்திர வருமானமாக கிடைக்கும் . 15 லட்சம் ரூபாயை ஜாயிண்ட் அக்கவுண்டில் முதலீடு செய்தால் மாதத்திற்கு 9,250 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் நம்பிக்கையோடு உங்களுடைய பணத்தை முதலீடு செய்யலாம். தபால் நிலைய முதலீட்டு திட்டங்கள் குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் அதிக ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு கச்சிதமாகவும் இருக்கும்.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications