பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டு திட்டத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்வதன் மூலம் உத்தரவாதமான வட்டி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த மாத வருமானம் நீங்கள் செய்யும் முதலீட்டை பொருத்து மாறுபடும்.
அதாவது நீங்கள் POMIS திட்டத்தில் 2 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் அதற்கென்று தனி வட்டி வருமானம் கிடைக்கும். அதுவே அதற்கு மேற்பட்ட தொகைக்கு நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு ஏற்றார் போல் வட்டி கிடைக்கும். இந்தப் பதிவில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து கூட்டுக் கணக்காக பணத்தை டெபாசிட் செய்யும்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

மாதாந்திர வருமானம் பெற ஒருமுறை முதலீடு: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் உங்களால் கூட்டுக் கணக்கையும் திறக்க முடியும். அதேபோல ஒற்றைக் கணக்கையும் திறந்து கொள்ளலாம். கூட்டுக் கணக்கில் 3 பேர் வரை இருக்கலாம். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால்.. நீங்கள் இந்த திட்டத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதன் பின்பு 5 ஆண்டுகளுக்கு அதாவது இந்த திட்டம் முதிர்ச்சியடையும் வரை உங்களுக்கு அதிலிருந்து வட்டி வருமானம் வழங்கப்படும். தற்போது POMIS திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மாதாந்திர வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: தனிநபர் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்த டெபாசிட் தொகைக்கான முதிர்வுக்காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த அசல் தொகையையும் நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீங்கள் விருப்பப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தின் டெபாசிட் தொகையை நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த 5 ஆண்டு கால கட்டத்திற்குள் மாதம் மாதம் நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு ஏற்ப உங்களுக்கு வட்டி வருமானம் வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு என்பது தனிநபர் கணக்குக்கு 9 லட்சம் மற்றும் கூட்டு கணக்குக்கு 15 லட்சம். இதைத் தாண்டி ஒருவரால் டெபாசிட் செய்ய முடியாது. இந்த வரம்பிற்குள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். அந்த தொகைக்கு நீங்கள் டெபாசிட் செய்யும் அளவை பொறுத்து வட்டி வழங்கப்படும்.
நீங்களும் உங்கள் மனைவியும் கூட்டு கணக்கை திறந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஒரு திருமணமான ஜோடி ரூ.15 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால் 7.4 சதவீத வட்டு விகிதத்தில் ஆண்டுக்கு 1,11,000 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
அப்படியானால் மாத மாதம் 9,250 ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகை உங்கள் போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இது அதிகபட்சமான டெபாசிட் தொகையான 15 லட்சத்திற்கு வழங்கப்படும் மாதாந்திர வருமானம். இதற்கு கீழ் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம். அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆன்லைன் கால்குலேட்டர்களை பயன்படுத்தலாம்.
7.4 சதவீத வட்டி விகிதம் மற்றும் நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்ற விவரங்களை என்டர் செய்யும் போது ஆன்லைன் கால்குலேட்டரில் மாத வருமானம் எவ்வளவு கிடைக்கும் என்பது தெளிவாக தெரிந்து விடும்.
POMIS திட்டம் மூன்று பேர் வரை கூட்டுக் கணக்கைத் திறக்க அனுமதிக்கிறது. கிடைக்கும் வருமானம் கணக்கு வைத்திருப்பவர்களிடையே சமமாக பிரித்து வழங்கப்படுகிறது. நீங்கள் எந்த நேரத்திலும் ஒரு கணக்கை கூட்டுக் கணக்காகவோ அல்லது கூட்டுக் கணக்கை தனிநபர் கணக்காகவோ மாற்றலாம். கூட்டுக் கணக்கில் மாற்றங்களைச் செய்ய, கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து கூட்டு விண்ணப்பம் தேவை.
முன்கூட்டியே கணக்கை மூடுதல்: இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இருப்பினும் முன்கூட்டியே கணக்கை மூடுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து 1 வருடம் கழித்து நீங்கள் பணத்தை எடுக்கலாம். அதற்கு முன்னர் எடுக்க முடியாது. 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் மொத்த பணத்தையும் திரும்ப பெற்றால் டெபாசிட் தொகையில் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதுவே 3 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தொகையும் திரும்ப பெற்றால் டெபாசிட் தொகையில் 1 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
கணக்கைத் திறப்பதற்கான தகுதி: எந்தவொரு இந்திய குடிமகனும், வயது வந்தோ அல்லது சிறியவரோ, POMIS கணக்கைத் திறக்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஒரு மைனர் பெயரில் ஒரு கணக்கைத் திறக்கலாம், மேலும் குழந்தைக்கு 10 வயது ஆனதும், அவர்கள் தாமாக கணக்கை இயக்கலாம். POMIS கணக்கைத் திறக்க, நீங்கள் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆதார் அட்டை அல்லது பான் கார்டு போன்ற அடையாளச் சான்றினை வழங்க வேண்டும்.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?

PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

வெள்ளி 15% சரிவு.. தங்கம் 3% ஏற்றம்! குழப்பத்தில் முதலீட்டாளர்கள் - இப்போது என்ன செய்வது?



Click it and Unblock the Notifications