எல்லோருக்குமே ஏதாவது ஒரு முதலீட்டு திட்டத்தின் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதில் கிடைக்கக்கூடிய வருமானம் லாபகரமானதாகவும், முதலீடு செய்யக்கூடிய தொகை பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்றும் யோசிப்பார்கள். இது போன்ற நபர்களுக்காகத்தான் பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற PPF திட்டம் உள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்தத் திட்டம் ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரராக முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
PPF என்றால் என்ன?: பொது வருங்கால வைப்பு நிதி என்பது இந்திய அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இது ஆபத்து இல்லாத முதலீட்டு திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

15 வருட முதிர்வுக்காலத்துடன், நீண்ட காலத்திற்கு தங்கள் நிதியைத் முதலீடு செய்ய விரும்புவோருக்கு PPF திட்டம் சிறந்தத் தேர்வாக இருக்கும். இந்தத் திட்டம் தற்போது 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் பெறப்பபடும் அசல் மற்றும் வட்டிக்கு முற்றிலும் வரி இல்லை.
PPF திட்டத்தை பயன்படுத்தி உங்களால் 1 கோடி வரை சம்பாதிக்க முடியும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
வருடாந்திர டெபாசிட்: PPF திட்டத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். PPF திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம். ஆனால் நீங்கள் 1 கோடி ரூபாய் பெற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும்.
முதிர்வு காலம்: PPF திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள். உங்கள் PPF கணக்கை அதன் பிறகு 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். உங்களுடைய வருவாயை அதிகரிக்க உங்கள் PPF கணக்கை குறைந்தது 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.
எனவே 25 ஆண்டுகளுக்கு ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் வீதம் டெபாசிட் செய்யுங்கள். இதன் மூலம் 25 ஆண்டுகள் கழித்து 37,50,000 ரூபாயை டெபாசிட் செய்திருப்பீர்கள். அப்படியானால் அதற்கு வட்டியாக 65,58,015 ரூபாய் கிடைக்கும். மொத்த முதிர்வு தொகையாக 1,03,08,015 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்.
ஒழுக்கமான வருடாந்திர பங்களிப்புகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட முதலீட்டு காலங்கள் மூலம், PPF உங்களை ஒரு மில்லியனராக மாற்றும். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) சொத்துக் குவிப்புக்கு நம்பகமான மற்றும் வரி இல்லாத சிறந்த திட்டம். ஆண்டுதோறும் ரூ. 1.5 லட்சத்தை தொடர்ந்து டெபாசிட் செய்து உங்கள் முதலீட்டை 25 முதல் 35 ஆண்டுகள் வரை நீட்டிப்பதன் மூலம், உங்கள் நிதி எதிர்காலத்தை மாற்றியமைத்து, கோடீஸ்வரராக முடியும்.


Click it and Unblock the Notifications